உளவுத்துறை அமைப்புகளின் கண்காணிப்பில் பழ நெடுமாறன்

உளவுத்துறை அமைப்புகளின் கண்காணிப்பில் பழ நெடுமாறன்

2 mins read
85b8c96f-8161-4a51-8336-e7b700226013
-

சென்னை விடு­த­லைப் புலி­கள் இயக்­கத்­தின் தலை­வர் பிர­பா­க­ரன் உயி­ரு­டன் இருப்­ப­தாக தெரி­வித்­துள்ள தமி­ழர் பேர­மைப்­பின் தலை­வர் பழ.நெடு­மா­ற­னி­டம் விசா­ரணை நடத்த மத்­திய, மாநில உளவு அமைப்­பு­கள் முடிவு செய்­துள்­ளன.

பிர­பா­க­ரன் உயி­ரு­டன் இருப்­ப­தற்­கான ஆதா­ரங்­கள் உள்­ள­தா­க­வும் அவ­ரது குடும்­பத்­தா­ரு­டன் தாம் தொடர்­பில் இருப்­ப­தா­க­வும் நெடு­மா­றன் கூறி­யுள்­ளார்.

இது இந்­தி­யா­வி­லும் இலங்­கை­யி­லும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்தி உள்­ளது. நெடு­மா­றன் சொல்­வது உண்­மையா அல்­லது தவ­றான தக­வலா என்­பது குறித்து பொது வெளி­யில் பல்­வேறு விவா­தங்­கள் கிளம்­பி­யுள்ள நிலை­யில், பிர­பா­க­ரன் மர­ணம் குறித்த விசா­ர­ணையை உளவு அமைப்­பு­கள் தொடங்கி உள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

நெடு­மா­ற­னும் அவ­ரது ஆத­ர­வா­ளர்­களும் தற்­போது உளவு அமைப்­பு­க­ளின் கண்­கா­ணிப்பு வளை­யத்­துக்­குள் கொண்டு வரப்­பட்­டுள்­ள­தாக தமி­ழக ஊட­கச் செய்தி தெரி­விக்­கிறது.

நெடு­மா­றன் தரப்­பி­டம் மிக விரை­வில் விசா­ரணை நடத்த உள­வுப்­பி­ரிவு அதி­கா­ரி­கள் முடிவு செய்­துள்­ள­தா­கத் தெரி­கிறது.

தமி­ழக காவல்­து­றை­யின் உள­வுப் பிரிவு கூடு­தல் டிஜிபி டேவிட்­சன் தேவா­சீர்­வா­தம், அப்­பி­ரி­வின் ஐ.ஜி. செந்­தில்­வே­லன், கியூ பிரிவு கண்­கா­ணிப்­பா­ளர் கண்­ணம்­மாள் ஆகிய மூன்று அதி­கா­ரி­கள் இந்த விவ­கா­ரம் தொடர்­பாக விசா­ரணை மேற்­கொண்டு வரு­வ­தா­க­ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இம்மூன்று பேரின் தலை­மை­யில் காவல்­து­றை­யி­னர் மேற்­கொண்­டுள்ள விசா­ரணை தொடர்­பான அறி­விப்­பு­கள் விரை­வில் வெளி­யி­டப்­படும் எனத் தெரி­கிறது.

இலங்­கை­யில் நடை­பெற்ற இறு­திப் போரின்­போது பிர­பா­க­ரன் குடும்­பத்­தில் எவ­ரும் தப்­ப­வில்லை என்­றும் இலங்கை முன்­னாள் தள­பதி சரத் பொன்­சேகா தெரி­வித்­துள்­ளார்.

இலங்­கைத் தமி­ழர் விவ­கா­ரம் தொடர்­பாக நீண்ட கால­மா­கக் குரல் கொடுத்து வரு­கி­றார் நெடு­மா­றன். அவ­ருக்கு இலங்­கை­யில் பல­ரு­டன் தொடர்­புள்­ள­தால் அவ­ரது கூற்றை லேசாக கரு­தி­விட இய­லாது என உளவு அமைப்­பு­கள் கரு­து­வ­தா­கத் தெரி­கிறது.

இதற்­கி­டையே, பிர­பா­க­ரன் மர­ணம் தொடர்­பாக மீண்­டும் குழப்­ப­மான தக­வல்­களை வெளி­யிட வேண்­டாம் என நாம் தமி­ழர் கட்­சி­யின் தலைமை ஒருங்­கி­ணைப்­பா­ளர் சீமான் கூறி­யுள்­ளார். இந்நிலையில், பிரபாகரன் நலமுடன் இருந்தால் அதைவிட உலகத் தமிழர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடியது வேறு ஒன்றும் இருக்க முடியாது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.