கே.எஸ். அழகிரி: அதானி குறித்து பேச மறுக்கிறார் பிரதமர்

கே.எஸ். அழகிரி: அதானி குறித்து பேச மறுக்கிறார் பிரதமர்

1 mins read

சென்னை: தொழி­ல­தி­பர் அதானி ரூ.10 லட்­சம் கோடிக்கு மேல் ஊழல் செய்­துள்­ள­தாக தமி­ழக காங்­கி­ரஸ் தலை­வர் கே.எஸ்.அழ­கிரி தெரி­வித்­துள்­ளார்.

எனி­னும் நாட்­டின் பிர­த­மர் அதானி குறித்து பேச மறுப்­ப­தாக செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசு­கை­யில் அவர் குறிப்­பிட்­டார்.

அதானி குழும முறை­கே­டு­களைக் கண்­டித்து தமி­ழக காங்கி­ரஸ் சார்­பில் பாரத ஸ்டேட் வங்­கிக் கிளை­கள், எல்­ஐசி நிறுவன அலு­வ­ல­கங்­கள் முன்பு தொடர் போராட்­டங்­கள் நடத்­தப்­படும் என்­றார் அழ­கிரி.

"அதானி குழு­மங்­கள் பல்­வேறு முறை­கே­டு­களில் ஈடு­பட்­டி­ருப்­பது தெரி­ய­வந்­துள்­ளது. எனவே­தான் நாடா­ளு­மன்ற கூட்டுக்­குழு விசா­ர­ணைக்கு உத்­த­ர­விட வேண்­டும் என காங்­கி­ரஸ் வலி­யு­றுத்தி வரு­கிறது.

"ஆனால் பாஜ­க­வி­னர் இத்­தகைய விசா­ர­ணைக்கு தயா­ராக இல்லை. பிர­த­மர் நரேந்­திர மோடியோ, இது­வரை அதானி குறித்து எந்­த­வித கருத்­தும் தெரிவிக்­க­வில்லை," என்­றார் கே.எஸ்.அழ­கிரி.

தமி­ழ­கத்­தில் அங்­கொன்­றும் இங்­கொன்­று­மாக சில குற்­றங்­கள் நடை­பெ­று­வ­தா­கக் குறிப்­பிட்ட அவர், எனி­னும் அவற்றை யாரும் மூடி மறைக்­க­வில்லை என்­றார்.

அதே­ச­ம­யம், உத்­த­ரப் பிரதேசம் போன்ற பாஜக ஆளும் பிற மாநிலங்­களில் சட்­டம், ஒழுங்கு நிலை எவ்­வாறு உள்­ளது என்பதை நன்கு ஒப்­பிட்­டுப் பார்த்து, அதன் பிறகு தமி­ழக அரசை விமர்­சிப்பதுதான் சரியாக இருக்கும் என்­றும் கே.எஸ்.அழ­கிரி மேலும் தெரி­வித்­தார்.