வரி ஏய்ப்பு: சென்னையில் 20 இடங்களில் சோதனை

வரி ஏய்ப்பு: சென்னையில் 20 இடங்களில் சோதனை

1 mins read

சென்னை: வரி ஏய்ப்பு புகார்களின் அடிப்­ப­டை­யில் சென்னை­யில் நேற்று இரு­பதுக்கும் மேற்­பட்ட இடங்­களில் வரு­மான வரித்­து­றை­யி­னர் அதி­ரடிச் சோதனை நடவடிக்கை மேற்­கொண்­ட­னர்.

சென்னை அண்ணா நகர் பகு­தி­யில் இயங்கி வரும் பிர­பல தங்கு விடு­தி­யின் உரி­மை­யாளரின் வீடு, அலு­வ­லகத்தில் சோதனை நடத்­தப்­பட்­டது.

மேலும் காஞ்­சி­பு­ரம், மணலி, திருப்பெ­ரும்­பு­தூர், விழுப்­பு­ரம் உள்ளிட்ட பல்­வேறு இடங்­களிலும் வரு­மான வரித்­துறை அதி­கா­ரி­கள் சோதனை நட­வடிக்­கை­யில் ஈடு­பட்­ட­னர்.

வரி ஏய்ப்பு தொடர்­பாக நாடு முழு­வ­தும் பல்­வேறு மாநி­லங்­களில் சோதனை நடத்­தப்­பட்ட நிலை­யில், சென்­னை­யி­லும் அத்­த­கைய நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக ஊட­கச் செய்­தி­கள் தெரி­வித்­தன.

அண்மை மாநி­லங்­க­ளான கேரளா, கர்­நா­ட­கா­வி­லும் வரு­மான வரி ஏய்ப்பு தொடர்­பாக பல்­வேறு நிறு­வ­னங்­களில் சோதனை நடத்­தப்­பட்­ட­தாக ஊட­கங்­கள் குறிப்­பிட்­டன.

இதற்­கி­டையே, சென்னை தியா­க­ராய நகர் பகு­தி­யில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்­போது பல லட்சம் ரூபாய் ரொக்­க­மா­கப் பறி­மு­தல் செய்­யப்­பட்­ட­தாக தகவல் வெளி­யா­னது. எனினும் அது வெறும் வதந்தி என பின்னர் தெரியவந்­தது.