'கார் தந்தால் பணம்': நூதன அறிவிப்பு செய்து மோசடி

'கார் தந்தால் பணம்': நூதன அறிவிப்பு செய்து மோசடி

1 mins read

கோவை: 'கார் கொடுத்­தால் பணம்' என்ற கவர்ச்­சி­க­ர­மான அறி­விப்பை வெளி­யிட்டு நூதன மோச­டி­யில் ஈடு­பட்­ட­வர் கோவை காவல்­து­றை­யி­ன­ரி­டம் சிக்­கி­னார்.

அவ­ரி­டம் இருந்து 19 கார்களும் ரூ.8 லட்­சம் ரொக்­கப் பணமும் பறி­மு­தல் செய்­யப்­பட்­டன.

நாகை மாவட்­டத்­தைச் சேர்ந்­த­வர் வெங்­க­டேஷ். இவர் கடந்த 2018ஆம் ஆண்டு கோவை மாவட்­டம், கவுண்­டம்­பா­ளை­யம் பகு­தி­யில் பயண நிறு­வ­னம் ஒன்றை தொடங்­கி­னார்.

பின்­னர், கார் வைத்­தி­ருப்­ப­வர் தங்­களை அணுகி காரை கொடுத்­தால் அதற்கு மாதந்­தோ­றும் பத்­தா­யி­ரம் ரூபாய் வாடகை கொடுக்­கப்­படும் என்­றும் புதிய கார்­களுக்கு மாதத் தவணை செலுத்த வேண்­டி­யி­ருந்­தால் அதற்கு தனது நிறு­வ­னமே பொறுப்­பேற்­கும் என்றும் அறி­வித்­தார் வெங்கடேஷ்.

அவரை நம்பி பலர் தங்­கள் கார்­களை ஒப்­ப­டைத்­த­னர். இவ்­வாறு முப்­பது கார்­களை வைத்து தனது நிறு­வ­னத்தை நடத்தி வந்த வெங்­க­டேஷ், ஓரிரு மாதங்­கள் தாம் அறி­வித்­த­படி கார் உரி­மை­யா­ளர்­க­ளுக்­குப் பணம் கொடுத்­துள்­ளார்.

இந்­நி­லை­யில், திடீ­ரென தலை­ம­றை­வா­னார் வெங்­க­டேஷ். உரி­மை­யா­ளர்­க­ளி­டம் கார், பணம் என எதை­யும் கொடுக்­கா­மல் அந்த நிறு­வ­னத்­தைச் சேர்ந்­த­வர்­களும் மாய­மா­கி­னர்.

மோசடிப் புகார்­க­ளின் பேரில் காவல்­துறை விசா­ரணை நடத்தி வரு­கிறது.

தன்­னி­டம் ஒப்­ப­டைக்­கப்­படும் கார்­களை போலி ஆவ­ணங்­கள் தயார் செய்து வெங்­க­டேஷ் பிறரிடம் விற்­றது தெரி­ய­வந்­துள்­ளது. அவ­ரது தலை­மை­யில் இயங்கிய மோச­டிக் கும்­ப­லி­டம் இருந்து இது­வரை 19 கார்­கள் மீட்­கப்­பட்­டுள்­ளன.