எச்சரிக்கையை மீறியதால் விபரீதம்: ஆட்சியர் பிரபுசங்கர்

எச்சரிக்கையை மீறியதால் விபரீதம்: ஆட்சியர் பிரபுசங்கர்

1 mins read
6822fa51-5b4d-419b-a345-0b2386036cd3
-

கரூர்: புதுக்­கோட்டை மாவட்­டம், விரா­லி­ம­லை­யைச் சேர்ந்த பள்ளி மாண­வி­கள் கரூர் மாவட்­டத்­தில் நடக்­கும் விளை­யாட்­டுப் போட்­டி­யில் கலந்­து­கொள்­வ­தற்­காக வந்­தி­ருந்­த­னர்.

அப்­போது அவர்­கள் அங்­குள்ள காவிரி ஆற்­றில் குளித்­துக் கொண்­டி­ருந்­த­போது ஆழம் தெரி­யா­மல் நீரில் மூழ்கி மாய­மா­கி­னர்.

அப்­ப­குதி இளை­ஞர்­களும் தீய­ணைப்­புத்­து­றை­யி­ன­ரும் மாணவிகளைத் தேடி­ய­தைத் தொடர்ந்து, மூழ்­கிய இடத்­தில் இருந்து சில மீட்­டர் தொலை­வில் நான்கு மாண­வி­களும் சட­ல­மாக மீட்­கப்­பட்­ட­னர்.

அவர்­க­ளது சட­லங்­களை பரி­ச­லில் போட்டு மீட்­புக் குழு­வி­னர் கரைக்குக் கொண்டு வந்­த­னர். அவர்­க­ளது சட­லங்­கள் உடல்கூறு பரி­சோ­த­னைக்­காக கரூர் அரசு மருத்­து­வ­மனைக்கு எடுத்­துச்செல்­லப்­பட்­டது.

இந்­நி­லை­யில், கரூர் மாவட்ட ஆட்­சி­யர் பிரபு சங்­கர் மீட்­புப் பணி­க­ளைப் பார்­வை­யிட்­டபின் செய்­தி­யா­ளர்­களிடம் பேசியபோது, குளிப்­ப­தற்கு தடை செய்­யப்­பட்ட பகுதி என எச்­ச­ரிக்கை பலகை இருந்­தும் காவிரி ஆற்­றில் இறங்கி குளித்­த­தால் வெளி­மா­வட்­டத் தைச் சேர்ந்த நான்கு மாண­வி­கள் உயி­ரி­ழந்­த­தாகக் கூறினார்.

இந்த பகு­தி­யில் இதுபோல பல­முறை நடந்­தி­ருப்­ப­தா­க­வும், தடுப்புக் கம்­பி­கள் அமைத்து இந்த பகு­திக்கு மக்­கள் செல்­வதை நிரந்­த­ரமாக தடுக்க வேண்­டும் என்­றும் அங்­குள்ள மக்­கள் கோரியுள்­ள­னர்.

இத­னி­டையே, உயி­ரி­ழந்த மாண­வி­க­ளின் குடும்­பத்­தி­ன­ருக்கு இரங்­கல் தெரி­வித்­துள்ள முதல்வர் மு.க.ஸ்டா­லின், தலா இரண்டு லட்­சம் ரூபாய் நிவா­ர­ணம் அறி­வித்­தார்.

கவனக் குறைவாகச் செயல்­பட்ட தலை­மை­யா­சி­ரி­யர் பொட்டு­மணி, ஆசி­ரி­யர்கள் இப்­ராகிம், தில­க­வதி ஆகி­யோர் தற்­கா­லிகப் பணி­யிடை நீக்­கம் செய்­யப்­பட்­ட­னர்.