சென்னை: இந்து சமய அற நிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 330 சிவாலயங்களில் இம்மாதம் 18ஆம் தேதி மகா சிவராத்திரி விழா சிறப்பாகக் கொண்டாடப்படும் என அமைச்சா் சேகா்பாபு தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளி யிட்டுள்ள அறிக்கையில், இந்த ஆண்டு மயிலாப்பூா் கபாலீசுவரா், திருவண்ணாமலை அருணாசலேசுவரா், தஞ்சாவூா் பெருவுடையார், பேரூா் பட்டீஸ்வரா், திருநெல்வேலி நெல்லையப்பன் ஆகிய ஐந்து கோயில்களிலும் மகா சிவராத்திரி விழாவை வெகு சிறப்பாகக் கொண்டாடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பக்தா்கள், பொதுமக்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து தரவும் எவ்வித புகார் களுக்கும் இடம் தராமல் நிகழ்ச்சிகளை நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரி விக்கப்பட்டுள்ளது.

