தஞ்சாவூர்: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிருடன், நலமாகத் தான் இருக்கிறார் என்ற அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பாக, இதுகுறித்து தமிழீழ விடுதலை ஆதரவு தலைவர்களுடன் ஆலோசிப்பதற்காக பழ நெடு மாறன் (படம்) அழைப்பு விடுத் திருந்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால், அவரது இந்த அழைப்பை வைகோ, திருமா வளவன், வேல்முருகன், கொளத்தூர் மணி போன்றோர் புறக்கணித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த அறிவிப்பு வெளியிடு வதற்கு முன்னதாக, முதல் நாள் இரவு தஞ்சாவூர் வந்த வைகோ, பழ.நெடுமாறனை சந்திக்கா மலேயே திரும்பிச் சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.
பழ.நெடுமாறனுடன் விவாதிக்க தமிழீழ ஆதரவு தலைவர்களான வைகோ, திருமா வளவன், வேல்முருகன், கொளத் தூர் மணி உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் தஞ்சாவூர் முள்ளி வாய்க்கால் முற்றத்துடன் தொடர்புள்ளவர்கள் தெரிவித்திருந்தனர்.
அதன்படி, பிப்ரவரி 12ஆம் தேதி இரவு தஞ்சாவூர் வந்த வைகோ, தமிழ்நாடு தங்கும் விடுதியில் தங்கியிருந்தார். மற்ற தலைவர்கள் யாரும் வராத நிலை யில், மறுநாள் காலை தன் அறையை காலி செய்துவிட்டு வைகோ தஞ்சாவூரிலிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
அதேபோல் திருமாவளவன், வேல்முருகன், கொளத்தூர் மணி போன்றோரும் வரவில்லை.
இதனிடையே 13ஆம் தேதி காலை செய்தியாளர்களைச் சந்தித்த பழ.நெடுமாறன், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக அறிவித்தார்.
இதுதொடர்பாக வைகோ வெளியிட்ட அறிக்கையில், ''பிரபாகரனோடு களத்தில் நின்ற போராளிகள் சிலர் இன்னும் உலகின் பல நாடுகளிலும் வசிக்கின்றனர். என்னுடன் தொடர்பில் இருக்கும் அந்தப் போராளிகள், பழ.நெடுமாறன் வெளியிட்ட செய்தி குறித்து உறுதிப்படுத்தவில்லை," என்றார்.
"எனினும், அவர் கூறியபடி பிரபாகரன் நலமுடன் இருந்தால் அதைவிட மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி வேறு ஏதுமில்லை,'' எனவும் வைகோ தெரிவித்துள்ளார்.
''தஞ்சாவூருக்கு வைகோ வந்திருந்தும், அவர் பழ.நெடு மாறனை சந்திக்காமல் சென்றதற்கு வேறு சில அரசியல் காரணங்கள் இருக்கலாம்,'' என்று உலகத் தமிழர் பேரமைப் பின் நிர்வாகி ஒருவர் கூறினார்.
ஆனால், திருமாவளவன், வேல்முருகன், கொளத்தூர் மணி போன்றோருக்கு அழைப்பு விடுத்தும், அவர்கள் வராதது ஏன் என்று தெரியவில்லை என பழ.நெடுமாறன் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் தங்கியிருக்கும் பழ.நெடுமாறனின் நடவடிக்கைகளை உளவுத்துறை காவலர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

