சென்னை: தனியார் எஸ்டேட்டில் அந்நிய மரங்களை வளர்ப்பதற்கு தடை விதித்தும் அங்குள்ள அந்நிய மரங்களை அகற்றவும் வலியுறுத்தி அறிவிப்பாணை வெளியிடும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்பு குறித்த வழக்குகள் நீதிபதிகள் சதீஷ்குமார், பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.
அப்போது, மாநில அரசின் கொள்கைப்படி தனியார் எஸ்டேட்டில் அந்நிய மரங்களை வளர்க்கத் தடை விதிப்பதற்கு அரசாணை வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டனர். அத்துடன், அகற்றப்படும் மரங்களை விற்று அதன்மூலம் கிடைக்கும் தொகையைக் கொண்டு வனங்களைச் சீரமைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி, விசாரணையை மார்ச் 16ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

