வாக்காளர்களை திமுக அடைத்து வைப்பதாக தமாகா புகார்

வாக்காளர்களை திமுக அடைத்து வைப்பதாக தமாகா புகார்

2 mins read
dfbd0f94-3ae3-42f9-ae6f-95981eca67a2
-

சென்னை: இடைத்­தேர்­தல் நடை­பெற உள்ள ஈரோடு கிழக்குத் தொகு­தி­யில் நூற்­றுக்­க­ணக்­கான வாக்­கா­ளர்­களை திமு­க­வி­னர் கூடா­ரங்­களில் அடைத்து வைத்­துள்­ள­தாக தமிழ் மாநில காங்­கி­ரஸ் கட்சி குற்­றம்­சாட்டி உள்­ளது.

இந்­நி­லை­யில், திமுக அரசு குறித்து அவ­தூறு பரப்ப வேண்­டும் என்­ப­தற்­காக தமாகா உள்­ளிட்ட எதிர்க்­கட்­சி­கள் பொய் குற்­றச்­சாட்­டு­களை முன்­வைப்­ப­தாக அமைச்­சர் செந்­தில்­பா­லாஜி தெரி­வித்­துள்­ளார்.

அதிமுக வேட்பாளரை ஆத­ரித்­துப் பிரசா­ரம் மேற்­கொண்ட தமி­ழக எதிர்­கட்­சித்­த­லை­வர் பழ­னி­சாமி, அதி­மு­க­வி­னர் சந்­தித்து­வி­டக் கூடாது என்­ப­தற்­காக திமு­க­வி­னர் வாக்­கா­ளர்­க­ளைக் கூடா­ரங்­களில் அடைத்து வைத்­துள்­ள­தா­கச் சாடி­னார்.

திமு­க­வி­னர் தேர்­தல் விதி­மீ­ற­லில் ஈடு­ப­டு­வது குறித்து முன்­னாள் அமைச்­சர்­கள் சி.வி.சண்­மு­கம், எஸ்.பி.வேலு­மணி, அதி­முக சட்­டப்­பி­ரிவு நிர்­வாகி இன்­ப­துரை ஆகி­யோர் தேர்­தல் நடத்­தும் அலு­வ­ல­ரி­டம் புகார் அளித்­த­து­டன், நீதி­மன்­றத்­தி­லும் வழக்கு தொடுத்­துள்­ள­தாக பழ­னி­சாமி தெரி­வித்­தார்.

இதற்­கி­டையே, தமிழ் மாநில காங்­கி­ரஸ் கட்­சி­யின் இளை­யர் அணித் தலை­வர் எம்.யுவா­ராஜா கூறு­கை­யில், மாற்­றுக் கட்­சி­யி­னர் மக்­க­ளைச் சந்­திக்­கக் கூடாது என்­ப­தற்­காக திமு­க­வி­னர் ஈரோட்­டில் 120 இடங்­களில் கொட்­டகை அமைத்து வாக்­கா­ளர்­களை அடைத்து வைத்­துள்­ள­தாக தெரி­வித்­தார்.

"தலை­வர்­கள் பிர­சா­ரம் மேற்­கொள்­ளாத நாள்­களில் காலை முதல் மாலை வரை வாக்­கா­ளர்­களை அடைத்து வைக்­கின்­ற­னர். மேலும், பிர­சா­ரம் என்ற பெய­ரில் ஊர்­வ­ல­மாக அழைத்­துச் செல்­கின்­ற­னர்.

"இதற்­கென ஒவ்­வொரு வாக்­கா­ள­ருக்­கும் நாள்­தோ­றும் ஆயி­ரம் ரூபாய் வரை வழங்­கப்­ப­டு­கிறது. வாக்­கா­ளர்­க­ளுக்கு உண­வும் வழங்­கப்­ப­டு­கிறது," என்று யுவ­ராஜா தெரி­வித்­துள்­ளார்.

எதிர்­க்கட்­சித் தலை­வர் பழனி­சாமி பிர­சா­ரம் மேற்­கொண்ட போது, காலை முதல் மாலை வரை அடைத்­து­வைக்­கப்­பட்ட வாக்­கா­ளர்­க­ளுக்கு தலா இரண்­டா­யி­ரம் ரூபாய் விநி­யோ­கம் செய்­யப்­பட்­ட­தாக குறிப்­பிட்­டுள்ள­ அவர், ஈரோடு கிழக்­குத் தொகுதி வாக்­கா­ளர்­கள் பலர் திமு­க­வி­ன­ரால் சுற்­றுலா அழைத்­துச் செல்­லப்­பட்­ட­தாக கூறி­னார்.

பல்­வேறு பகு­தி­களில் வீடு­தோறும் இறைச்சி வழங்­கப்­படு­வ­தா­க­வும் கோலம் போட­வும் ஆரத்தி எடுக்­க­வும் பணம் வழங்­கப்­ப­டு­வ­தா­க­வும் குறிப்­பிட்­டுள்ள யுவ­ராஜா, தேர்­தல் விதி­மு­றை­களை மீறி திமுக தரப்­பில் இடைத்­தேர்­தல் வெற்­றிக்­காக நூறு கோடி ரூபாய்க்­கும் மேல் செலவு செய்­யப்­ப­டு­வ­தாகக் குற்றம்­சாட்­டி­ உள்ளார்.

இதற்­கி­டையே, ஈரோடு கிழக்­குத் தொகு­திக்­கான வாக்­கா­ளர் பட்­டி­யலை தேர்­தல் ஆணை­யம்­தான் தயா­ரித்­துள்­ளது என்­றும் அதி­மு­க­வி­ன­ரைச் சந்­திக்க அத்­தொ­குதி மக்­கள் விரும்­ப­வில்லை என்­றும் அமைச்­சர் செந்­தில் பாலாஜி தெரி­வித்­துள்­ளார்.

தேர்­தல் ஆணை­யத்தை மீறி வாக்­கா­ளர் பட்­டி­ய­லில் எவ்­வாறு ஐம்­ப­தா­யி­ரத்­துக்­கும் மேற்­பட்ட வாக்­கா­ளர்­க­ளின் பெயர்­கள் இடம்­பெற முடி­யும் என்று கேள்வி எழுப்­பி­யுள்ள அவர், திமுக ஆத­ரவு பெற்ற வேட்­பா­ளர் ஈவிகேஎஸ் இளங்­கோ­வன் வெற்றி பெற்று விடு­வார் எனத் தெரிந்ததும், தோல்­விக்­கான கார­ணங்­களை அதி­மு­க­வி­னர் இப்­போதே பட்டி­ய­லி­டத் தொடங்­கி­விட்­ட­தாக குறிப்­பிட்­டுள்­ளார்.