ராமதாசின் 'தமிழைத் தேடி' பரப்புரை பயணம்

1 mins read

சென்னை: தமி­ழ­கத்­தில் 'எங்­கும் தமிழ், எதி­லும் தமிழ்' என்­ப­து­தான் ஒரு காலத்­தில் முழக்­க­மாக இருந்­தது என்­றும் இன்றோ, தமிழ் எங்கே என்று கேட்­கும் நிலை உரு­வாகி உள்­ளது என்­றும் பாமக நிறு­வ­னர் ராம­தாஸ் தெரி­வித்­துள்­ளார்.

பள்­ளி­களில் தமிழை பயிற்­று­மொ­ழி­யாக்க வேண்­டும் என்பன உள்­பட பல்­வேறு கோரிக்­கை­களை வலி­யு­றுத்தி 'தமி­ழைத்­தேடி' என்ற தலைப்­பில் தாம் பரப்­புரை பய­ணம் ஒன்றை மேற்­கொள்­வ­தா­க­வும் அவர் அறிக்கை வழி குறிப்­பிட்­டுள்­ளார்.

கோவில்­கள், உயர் நீதி­மன்­றம், வணிக நிறு­வ­னங்­க­ளின் பெயர்ப் பல­கை­கள், வீடு­களில் தாய்க்­கும் சேய்க்­கு­மான உரை­யா­டல்­கள் என எங்­கும் தமிழ் இல்லை என்று சுட்­டிக்­காட்­டி­யுள்ள அவர், இத்தகைய நிலைமை மாற்­றப்­பட வேண்­டும் என்­பதே தமிழ்­நாட்­டில் உள்ள பெரும்­பான்­மை­யி­ன­ரின் விருப்­ப­மா­க­வும் நோக்­க­மா­க­வும் உள்­ளது எனக் கூறி­யுள்­ளார்.

"தமிழ்­நாட்டு மக்­க­ளின் விருப்­பத்­தை­யும் நோக்­கத்­தை­யும் நிறை­வேற்­றும் வகை­யில், அழி­வின் விளிம்­பி­லி­ருந்து அன்­னைத் தமிழை மீட்­டெ­டுக்க வேண்­டும்.

"அதற்­காக தமிழ்­நாட்­டின் பள்ளி­களில் தமிழை பயிற்­று­மொ­ழி­யாக்கி சட்­டம் இயற்ற வேண்­டும், பள்­ளி­களில் தொடங்கி கோவில்­கள் வரை எல்லா இடங்­க­ளி­லும் தமிழே ஆட்சி செய்­யும் நிலையை உரு­வாக்க வேண்­டும் என்­பன உள்­ளிட்ட கோரிக்­கை­களை வலி­யு­றுத்த வேண்டும்.

"இதை முன்வைத்து வரு­கிற 21ஆம் தேதி உலக தாய்­மொழி நாளில் சென்­னை­யில் தொடங்கி மதுரை வரை தமி­ழைத்­தேடி பரப்­புரை பய­ணம் மேற்­கொள்ள இருக்­கி­றேன்," என்று ராம­தாஸ் தெரி­வித்­துள்­ளார்.