தமிழக மீனவர்கள் மீது கர்நாடக வனத்துறை துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி

தமிழக மீனவர்கள் மீது கர்நாடக வனத்துறை துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி

2 mins read
3d0b0753-fa06-4d41-a43c-a2e5792d953c
-

ஓசூர்: கர்­நா­டக மாநில வனத்­துறை­யி­னர் நடத்­திய துப்­பாக்­கிச் சூட்­டில் தமி­ழக மீன­வர் பலி­யான சம்­ப­வம் இரு மாநில எல்­லைப் பகு­தி­யில் பதற்­றத்தை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

இதை­ய­டுத்து எல்­லைப் பகு­தி­யில் பாது­காப்பு பலப்­ப­டுத்­தப்­பட்டுள்­ளதா­க­வும் போக்­கு­வ­ரத்து குறைக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் தகவல்­கள் தெரி­விக்­கின்­றன.

தமி­ழக, கர்­நா­டக எல்­லை­யில் உள்­ள பாலாறு வனப்­ப­கு­தி­யில் காவி­ரி­யும் பாலா­றும் கலக்கின்றன. இந்­தப் பகுதி மீன்­வ­ளம் மிக்­கது என்­ப­தால் தமி­ழக மீன­வர்­கள் பரி­ச­லில் சென்று மீன்பிடித் தொழி­லில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்.

நீண்­ட ­கா­ல­மாக தமி­ழக மீனவர்­கள் மீன்­பி­டித்து வந்­தாலும், கர்­நா­டக வனத்­துறை இதற்கு கடும் எதிர்ப்பு தெரி­வித்து வருகிறது. இந்­நி­லை­யில், கடந்த செவ்வாய்க்­கி­ழ­மை­யும் தமி­ழக மீன­வர்­கள் வழக்­கம்­போல் பரி­சல்­களில் சென்று பாலாற்­றில் மீன்­பிடித்­துக் கொண்­டி­ருந்­த­னர்.

அப்­போது திடீ­ரென அங்கு வந்த கர்­நா­டக வனத்­து­றை­யி­னர், மீன­வர்­களை நோக்கி துப்­பாக்கிச் சூடு நடத்­தி­யுள்­ள­னர். இத­னால் கடும் அதிர்ச்­சி­ய­டைந்த மீன­வர்­கள் உட­ன­டி­யாக கரைக்குத் திரும்­பி­னர்.

இந்­நி­லை­யில், ராஜா என்ற மீன­வரை மட்­டும் காண­வில்லை. கரை திரும்­பாத நிலை­யில், வனத்­து­றை­யி­னர் நடத்­திய துப்­பாக்­கிச் சூட்­டில் அவர் பலி­யாகி இருக்­க­லாம் என்று கரு­தப்­பட்­டது.

இதை­ய­டுத்து மீன­வர் ராஜா­வின் உடல் பாலாற்­றில் தேடப்பட்டு வந்­தது. இந்­நி­லை­யில், நேற்று காலை அவ­ரது உடல் கரை ஒதுங்­கி­யது. இத­னால் மீன­வர்­கள் கொந்­த­ளிப்­பில் உள்­ள­னர்.

துப்­பாக்­கிச் சூடு குறித்து கேள்­விப்­பட்ட பல்­வேறு மீன­வர் அமைப்­பு­கள் கடும் கண்­ட­னம் தெரி­வித்­துள்­ளன. இரு மாநில எல்­லைப் பகு­தி­களில் அசம்­பா­வி­தங்­க­ளைத் தடுக்­கும் வகை­யில், காவல்­து­றை­யி­னர் குவிக்­கப்­பட்டுள்­ள­னர்.

கடந்த 2018ஆம் ஆண்­டும் உரிய அனு­ம­தி­யின்றி தமி­ழக மீனவர்­கள் மீன்­பி­டித்­த­தா­கக்­கூறி கர்­நா­டக வனத்­துறை தாக்­கு­தல் நடத்­தி­யது. அப்­போ­தும் ஒரு மீனவர் கொல்­லப்­பட்­டார்.

அச்­ச­ம­யம் இரு மாநில எல்லை­யில் வன்­மு­றைச் சம்­ப­வங்­கள் அரங்­கே­றின. ஐந்து ஆண்டுகளுக்­குப் பிற­கும் மேலும் ஒரு தமி­ழக மீன­வர் கொல்­லப்­பட்­டுள்­ளார்.

மீன­வர்­கள் சட்­ட­வி­ரோ­த­மாக பாலாறு வனப்­ப­கு­தி­யில் மான் வேட்­டை­யா­டி­ய­தால் துப்­பாக்­கிச் சூடு நடத்­தி­ய­தாக வனத்­துறை தரப்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. எனி­னும் மீன­வர்­கள் இதை மறுத்துள்­ள­னர். எல்லையில் பதற்றம் நிலவி வருவதையடுத்து கூடுதல் காவல்துறையினர் குவிக்கப்பட உள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.