நீதிமன்றம்: கோவில்களில் சாதிய பாகுபாடு கூடாது

நீதிமன்றம்: கோவில்களில் சாதிய பாகுபாடு கூடாது

1 mins read

மதுரை: கோவில்­களில் சாதிய பாகு­பாடு காட்­டக்­கூ­டாது என மதுரை உயர் நீதி­மன்ற கிளை உத்­த­ர­விட்­டுள்­ளது.

இது தொடர்­பான வழக்கை விசா­ரித்த நீதி­மன்­றம், அனை­வ­ரும் சம­மாக நடத்­தப்­பட வேண்­டும் எனக் குறிப்­பிட்­டது.

"கோவில்­களில் அனை­வ­ரும் அமை­தி­யான முறை­யில் வழி­பாடு செய்­வதை மாவட்ட நிர்­வா­கம் உறு­திப்­ப­டுத்த வேண்­டும். இதற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்­டும்," என்று நீதி­மன்ற உத்­த­ர­வில் மேலும் கூறப்­பட்­டுள்­ளது.

உயர் சாதி­யி­னர் தங்­களை கோவி­லில் வழி­பாடு செய்ய விடா­மல் தடுப்­ப­தா­க­வும் குல­சாமி பூசை செய்ய அனு­மதி கோரி­யும் உயர் நீதி­மன்ற கிளை­யில் வழக்கு தொடுக்­கப்­பட்­டது. அம்­ம­னுவை விசா­ரித்­த­போதே நீதி­மன்­றம் மேற்­கு­றிப்­பிட்ட உத்­த­ர­வைப் பிறப்­பித்­தது. இந்த உத்தரவை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.