ஈரோடு: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் களத்தில் அமைதி வழியில் பரப்புரை செய்து கொண்டிருந்த நாம் தமிழர் கட்சியினர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார்.
தோல்வி பயத்தில், அதிகாரத் திமிரில் மேற்கொள்ளும் இத்தகைய வன்முறை வெறியாட்டங்களால் நாம் தமிழர் கட்சியை ஒருபோதும் முடக்கிவிடமுடியாது என அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
"ஆளும் கட்சியினரின் இத்தகைய வன்முறை வெறியாட்டங்களைத் தேர்தல் ஆணையம் இனியும் கைகட்டி வேடிக்கை பார்ப்பது ஜனநாயகத்தின் மீதும் தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கையையும் முழுதாக தகர்ப்பதாகவே அமையும்.
"இந்தத் தாக்குதலுக்குக் காரணமானவர்களுக்கு ஈரோடு கிழக்குத் தொகுதி மக்கள் உரிய பாடம் புகட்டுவார்கள்," என சீமான் தெரிவித்துள்ளார்.

