நாயக்கர் காலத்து குதிரை வீரன் நடுகல் கண்டெடுப்பு

நாயக்கர் காலத்து குதிரை வீரன் நடுகல் கண்டெடுப்பு

1 mins read
5f041cff-c0dc-46b0-a572-dfc0a55102ff
-

திண்­டுக்­கல்: நத்­தம் பகு­தி­யில் மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்­வின்­போது நாயக்­கர் காலத்­தைச் சேர்ந்த நடு­கல் கண்­டெ­டுக்­கப்­பட்டது.

அது கி.பி. 16ஆம் நூற்­றாண்­டைச் சேர்ந்­த­தாக இருக்­கும் என்­றும் நத்­தம் என்­ப­தற்கு விளை­நிலம் சார்ந்த மக்­கள் வாழும் இடம் என்று பொருள் என்­றும் ஆய்­வில் ஈடு­பட்­டுள்ள மாணிக்­க­ராஜ் தெரி­வித்­துள்­ளார்.

"தற்­போது குதிரை வீரன் நடுகல் கிடைத்­துள்­ளது. நாயக்­கர் காலத்­தில் இப்­ப­கு­தியை குறு­நில மன்­னன் ஆட்சி செய்­தி­ருக்­க­லாம்.

"அந்த மன்­னன் அல்­லது தள­பதியைச் சித்­தி­ரிக்­கும் வகை­யில் குதிரை வீரன் நடு­கல் உள்­ளது. போரில் வீர மர­ணம் அடைந்த பின் குறு­நில மன்­ன­னின் நினை­வாக இந்­ந­டு­கல் எழுப்­பப்­பட்­டி­ருக்கக் கூடும்," என்­கி­றார் மாணிக்­க­ராஜ்.