மலிவு விலையில் மக்களுக்கு வீடு: முதல்வர் வலியுறுத்து

1 mins read

சென்னை: தமிழ்­நாட்­டின் வளர்ச்சிப் பாதை என்­பது எல்­லோ­ருக்­கு­மான வளர்ச்சி என்ற அடிப்­ப­டை­யில் அமைய வேண்­டும் என முதல்­வர் மு.க.ஸ்டா­லின் வலி­யு­றுத்தி உள்­ளார்.

மலிவு விலை­யில் மக்­க­ளுக்கு வீடு கிடைக்க வழி­வகை செய்ய வேண்­டும் என 'தமிழ்­நாடு ரியல் எஸ்­டேட் தொலை­நோக்குத் திட்டம்-2030' தொடக்க விழா­வில் பேசும்­போது அவர் குறிப்­பிட்­டார்.

"தமிழ்­நாட்­டில் உள்ள ஏழை எளிய மக்­கள், பொரு­ளா­தா­ரத்­தில் நலி­வுற்ற பிரி­வி­னர், குறைந்த, நடுத்­தர வரு­வாய் மக்­கள், உயர் வரு­வாய் பிரிவு மக்­க­ளுக்கு வீட்டு வச­தியை வழங்­கு­வ­தற்­கான பல்­வேறு திட்­டங்­களை, வீட்டு வசதி மற்­றும் நகர்ப்­புற வளர்ச்­சித்­துறை உள்­ளிட்ட பல்­வேறு துறை­க­ளின் மூல­மாக தமி­ழக அரசு செயல்­படுத்தி வரு­கிறது.

"ஒற்­றைச்­சா­ளர முறையில் 2030ஆம் ஆண்­டுக்­குள் அனை­வ­ருக்­கும் வாங்­கும் திற­னுக்­கேற்ற வீடு­க­ளை­யும் அடிப்­படை வச­தி­களை­யும் அளிக்க வேண்­டும் என்ற குறிக்­கோளை வைத்­துள்­ளோம். அதற்கான நட­வ­டிக்­கை­களை­யும் மேற்கொண்டுள்ளோம்," என்­றார் முதல்­வர் மு.க.ஸ்டா­லின்.