அமைச்சர்: 'ஒரே நாடு, ஒரே வரி' என்பது ஒத்துவராது

அமைச்சர்: 'ஒரே நாடு, ஒரே வரி' என்பது ஒத்துவராது

1 mins read

புது­டெல்லி: 'ஒரே நாடு, ஒரே வரி' என்­பது நடை­மு­றைக்கு ஒத்து வராது என தமி­ழக நிதி­ அமைச்­சர் பழ­னி­வேல் தியா­க­ரா­ஜன் தெரி­வித்­துள்­ளார்.

டெல்­லி­யில் செய்­தி­யா­ளர்­களி­டம் பேசிய அவர், முழக்­கங்­களை எழுப்­பு­வது எளிது என்­றும் அவற்­றைச் செயல்­படுத்­து­வது கடி­னம் என்­றும் குறிப்­பிட்­டார்.

"அந்த வகை­யில், 'ஒரே நாடு ஒரே வரி' என்­பது அர­சி­யலுக்குப் பொருந்­துமே தவிர செயல்­பாட்­டிற்கு ஒத்­து­வ­ராது.

"கூட்­டாட்சித் தத்­து­வத்­தில் அனைத்து மாநி­லங்­க­ளு­டைய உரி­மை­கள் காப்­பாற்­றப்­படும் அள­வுக்கு எங்­க­ளுக்கு நம்­பிக்கை வர­வேண்­டும்," என்றார் அமைச்­சர் பழ­னி­வேல் தியா­க­ரா­ஜன்.

ஜிஎஸ்டி மேல்­மு­றை­யீட்டு தீர்ப்­பா­யத்தை தேசிய அள­வில் மட்­டும் அமைப்­ப­தற்கு பல்­வேறு மாநி­லங்­கள் எதிர்ப்புத் தெரி­வித்­துள்­ள­தா­கக் குறிப்­பிட்ட அவர், மாநில அள­வில் தீர்ப்­பா­யம் அமைக்க வேண்­டும் என்று 13 மாநி­லங்­கள் கோரிக்கை விடுத்துள்­ள­தா­கத் தெரி­வித்­தார்.