மதுக்கடை வசூல்; தேர்தல் செலவுகளுக்கும் வாக்காளர்களுக்கும் விநியோகம் எனப் புகார்

மதுக்கடை வசூல்; தேர்தல் செலவுகளுக்கும் வாக்காளர்களுக்கும் விநியோகம் எனப் புகார்

2 mins read
e6afcafa-1da8-476e-986c-22ea22dc7dbe
-

ஈரோடு: இடைத்­தேர்­தல் நடை­பெற உள்ள ஈரோடு கிழக்­குத் தொகு­தி­யில் வாக்­கா­ளர்­களுக்குப் பணப்­பட்­டு­வாடா செய்­யப்­ப­டு­வதாக அதி­முக மீண்­டும் புகார் தெரி­வித்­துள்­ளது.

டாஸ்­மாக் மதுக்­க­டை­க­ளி­ல் நாள்­தோ­றும் வசூ­லா­கும் பணம் வாக்­கா­ளர்­க­ளுக்கு விநி­யோ­கிக்­கப்­ப­டு­வ­தாக அதி­முக முன்­னாள் அமைச்­சர் ஜெயக்­கு­மார் சாடி உள்ளார்.

இது தொடர்­பாக தமி­ழ­கத் தலை­மைத் தேர்­தல் அதி­காரி சத்­ய­பி­ரதா சாகு­வி­டம் அவர் புகார் அளித்­துள்­ளார்.

பின்­னர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், மதுக்­க­டை­களில் நாள்­தோ­றும் விற்­ப­னை­யா­கும் மது மூலம் கிடைக்­கும் தொகை அந்­தத் துறை­யின் அமைச்­சர் சொல்­லும் ஒரு­வ­ரி­டம் கொண்டு சேர்க்­கப்­ப­டு­கிறது என்­றார்.

"அந்­தப் பணத்தை ஆளும் தரப்­பி­னர் தேர்­தல் பணி­க­ளுக்­குப் பயன்­ப­டுத்­து­வ­தாக நாங்­கள் அறி­கி­றோம். இதே­போல் வெளி இடங்­களில் இருந்­தும் ஈரோடு கிழக்­குத் தொகு­திக்­குள் பணம் கொண்டு வரப்­ப­டு­கிறது. இந்­தத் தொகை­களை அர­சாங்க வரு­வாய் என்று சித்­தி­ரிப்­ப­தற்­காக, அரசு வங்­கிக்­க­ணக்­கில் வரவு வைக்­கின்­ற­னர்," என்­றார் ஜெயக்­கு­மார்.

இது அப்­பட்­ட­மான தேர்­தல் விதி­மீ­றல் என்று குறிப்­பிட்ட அவர், அர­சாங்­கப் பணத்தை ஓர் அர­சி­யல் கட்­சி­யா­னது தனது தேர்­தல் லாபத்­துக்­கா­கப் பயன்­படுத்­து­வதை ஏற்க இய­லாது என்­றார்.

ஏற்­கெ­னவே ஈரோடு கிழக்­குத் தொகு­தி­யில் 111 இடங்­களில் ஆளும் தரப்­பி­னர் கொட்­ட­கை­கள் அமைத்து வாக்­கா­ளர்­களை அடைத்து வைத்­தி­ருப்­ப­தா­க­வும் எதிர்க்­கட்­சி­க­ளின் பிர­சா­ரத்­துக்­குச் செல்­ல­வி­டா­மல் அவர்­கள் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­க­வும் ஜெயக்­கு­மார் குற்­றம்­சாட்­டி­னார்.

"இந்­நி­லை­யில் அர­சாங்­கப் பணத்­தை­யும்­கூட தேர்­தல் செலவு­க­ளுக்­குப் பயன்­ப­டுத்­த­லாம் எனும் புதிய, முறை­கே­டான வழியை கண்­ட­றிந்­துள்­ள­னர்.

"எனவே தமிழகத் தலை­மைத் தேர்­தல் அதி­காரி உரிய நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும். டாஸ்­மாக் மதுக்­க­டை­களில் வசூ­லா­கும் பணம் அன்­றைய தினமே அர­சுக்­க­ணக்­கில் வரவு வைக்­கப்­ப­டு­கி­றதா என்­ப­தைக் கண்­கா­ணிக்க வேண்­டும்," என்­றார் ஜெயக்­கு­மார்.

இந்­தக் குற்­றச்­சாட்டை திமுக நிர்வாகிகள் திட்­ட­வட்­ட­மாக மறுத்­துள்­ள­னர்.

பல்­வேறு புகார்­களை எழுப்­பும் அதி­மு­க­வி­னர் இது­வரை எந்த ஆதா­ரத்­தை­யும் காட்­ட­வில்லை என திமுக தரப்­பில் சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கிறது.