தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உயிரை மாய்த்துக்கொண்ட இளையரின் தோல், உடல் உறுப்புகள் தானம்

1 mins read

கோவை: உடல் உறுப்பு தானம் மூலம் மேட்­டுப்­பா­ளை­யத்­தைச் சேர்ந்த இளை­யர் ஒரு­வ­ரது தோல் தான­மா­கப் பெறப்­பட்­டுள்­ளது. தீக்­கா­யங்­கள், பிற நோய்­க­ளால் ஏற்­பட்­டுள்ள பாதிப்­பு­க­ளுக்­காக தோல் அறுவை சிகிச்சை மேற்­கொள்­ள காத்­தி­ருப்­ப­வர்­க­ளுக்கு இளை­ய­ரின் தோல் தான­மாக வழங்­கப்­பட உள்­ளது.

மேட்­டுப்­பா­ளை­யம் பகு­தி­யில் துணிக்­கடை ஒன்றில் வேலை பார்த்­து­வந்த 31 வய­தான நாக­ராஜ் என்­ப­வர் அண்­மை­யில் குடும்­பப் பிரச்­சினை கார­ண­மாக தனது உயிரை மாய்த்­துக்­கொண்­டார்.

இதை­ய­டுத்து தனது மக­னின் உடல் உறுப்­பு­களை தான­மாக வழங்க நாக­ரா­ஜின் தாயார் முன்­வந்­தார். இதற்­கான ஏற்­பா­டு­களை மேட்­டுப்­பா­ளை­யம் அரசு மருத்து­வ­மனை நிர்­வா­கம் செய்­தது. அப்­போது, நாக­ரா­ஜின் தோல் தான­மாக வழங்­கப்­பட்­டால், தோல் அறுவை சிகிச்­சைக்­கா­கக் காத்­தி­ருப்­போர் பலன் அடை­வர் என அவ­ரது தாயா­ரி­டம் விரி­வாக விளக்­கப்­பட்­டது. இதை­ய­டுத்து நாக­ரா­ஜின் தாயார் இதற்கு சம்­ம­தித்­தார்.

மேட்­டுப்­பா­ளை­யம் மருத்­து­வ­மனை­யில் முதன் முறை­யாக தோல் தான­மா­கப் பெறப்­பட்­டுள்­ளது. கோவை­யில் இருந்து வந்த சிறப்பு மருத்­து­வர்­கள் நாக­ரா­ஜின் தோல் பகு­தி­யை­யும் உடல் உறுப்­பு­க­ளை­யும் பாது­காப்­பாக அகற்­றி­னர்.

அந்த உறுப்­பு­க­ளுக்­கா­கக் காத்­திருப்­ப­வர்­க­ளுக்கு அவை பொருத்­தப்­படும் என்று அரசு மருத்­து­வர்­கள் தெரி­வித்­த­னர். மேலும் நாக­ரா­ஜின் தாயா­ருக்கு மருத்­து­வர்­களும் சமூக ஆர்­வ­லர்­களும் நன்றி தெரி­வித்­துள்­ள­னர்.