விபத்து: பிரசவம் முடிந்து வீடு திரும்பிய தாய், சேய் மரணம்

விபத்து: பிரசவம் முடிந்து வீடு திரும்பிய தாய், சேய் மரணம்

1 mins read
d812dce3-d5ad-44cb-9caa-bafb26a09d5c
படம்: இந்திய ஊடகம் -

ராம­நா­தபுரம்: பிர­ச­வம் முடிந்து மருத்­து­வ­ம­னை­யில் இருந்து வீடு திரும்­பிக் கொண்­டி­ருந்த தாயும் சேயும் விபத்­தில் பலி­யான சம்­ப­வம் ராமே­சு­வ­ரத்­தில் சோகத்தை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

ராம­நா­த­பு­ரம் மாவட்­டம், வேதா­ளம் பகு­தி­யைச் சேர்ந்த 25 வய­தான சுமதி கடந்த வெள்­ளிக்­கி­ழ­மை­யன்று அங்­குள்ள அரசு மருத்­து­வ­ம­னை­யில் பிர­ச­வத்­துக்­காக அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்­தார்.

கடந்த ஞா­யிற்­றுக்­கி­ழமை அவ­ருக்கு ஆண் குழந்தை பிறந்­ததை அடுத்து, தனது கண­வர் சின்ன அடைக்­கான், தாயார் காளி­யம்­மாள் ஆகி­யோ­ரு­டன் ஆட்­டோ­வில் வீடு திரும்­பி­னார்.

அந்த ஆட்டோ மதுரை, ராமேசு­வ­ரம் தேசிய நெடுஞ்­சாலை­யில் சென்­று­கொண்­டி­ருந்­த­போது, திடீ­ரென எதிரே வந்த கார் ஒன்று பெரும் வேகத்­தில் மோதி­யது. இதில் அந்த ஆட்டோ நொறுங்­கி­ய­தில், சும­தியும் ஆட்டோ ஓட்­டு­ந­ரும் சம்­பவ இடத்­தி­லேயே உயி­ரி­ழந்தனர்.

பொது­மக்­க­ளால் மீட்­கப்­பட்டு மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்ட நிலை­யில், பிறந்து மூன்று நாள்­களே ஆன சுமதியின் பச்­சி­ளங் குழந்­தை­யும் கண­வர் சின்ன அடைக்­கா­னும் சிகிச்சை பல­னின்றி உயி­ரி­ழந்­த­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

இத­னால் பலி எண்­ணிக்கை நான்­காக உயர்ந்­தது. இந்த விபத்து தொடர்­பாக கார் ஓட்டுநர் கைதாகி உள்­ளார்.