தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கொசு ஒழிப்பு நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது சென்னையில் பரவும் புதிய கிருமிக் காய்ச்சல்

2 mins read

சென்னை: புதிய கிரு­மிக் காய்ச்­ச­லால் சென்­னை­யில் பலர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக ஊட­கத் தக­வல் தெரி­விக்­கிறது. ஏரா­ள­மா­னோர் தனி­யார், அரசு மருத்­து­வ­ம­னை­களில் சிகிச்சை பெற்று வரு­வ­தா­க­வும் அச்­செய்­தி­யில் குறிப்­பிடப்­பட்­டுள்­ளது.

சென்­னை­யில் தற்­போது சுவாச ஒத்­தி­சைவு கிருமி (ஆர்.எஸ்.வி), அடினோ கிருமி உள்­ளிட்ட பாதிப்­பு­க­ளுக்கு வழக்­க­மான முறை­யில் சிகிச்சை அளிக்­கப்­பட்டு வரு­கிறது என்­றும் கடந்த சில நாள்­க­ளாக புதிய கிரு­மிக் காய்ச்­சல் பரவி வரு­வ­தா­க­வும் மாந­க­ராட்சி அதி­கா­ரி­கள் தெரி­விக்­கின்­ற­னர்.

மர்ம கிருமி பாதிப்­புக்கு ஆளா­கும் ஒரு­வ­ருக்கு தொடர்ந்து 48 மணி­நே­ரம் காய்ச்­சல் குறை­ய­வில்லை எனில், மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­ப­டு­வ­தாக சென்னை மாந­க­ராட்சி சுகாதார அதி­கா­ரி­யான மருத்­து­வர் ம.ஜெகதீ­சன் கூறு­கி­றார்.

"சில நோயா­ளி­க­ளுக்கு ரத்த அணுக்­க­ளின் எண்­ணிக்கை­யில் திடீர் வீழ்ச்சி ஏற்­படக்­கூ­டும். எனவே, உரிய பரி­சோதனை களைச் செய்­து­கொள்ள வேண்டும்.

"டிசம்­பர், ஜன­வரி மாதங்­க­ளு­டன் ஒப்­பி­டு­கை­யில், டெங்கி, சிக்­குன்­கு­னி­யா­வால் பாதிக்­கப்­படு­வோர் எண்­ணிக்கை குறை­வா­கவே உள்­ளது.

"எனி­னும், இதர கிருமி பாதிப்புக்கு ஆளா­வோர் எண்­ணிக்கை அதி­க­மாகி உள்­ளது. புதிய கிருமிப் பாதிப்பு மற்ற இடங்­க­ளுக்குப் பரவி வரு­கிறது," என்று மருத்­து­வர் ம.ஜெக­தீ­சன் கூறு­கி­றார்.

காய்ச்­சல் அறி­கு­றி­கள் குறைந்த பின்­னர் பல­ருக்கு பத்து நாள்­கள் இரு­மல் நீடிக்­கக்­கூ­டும் என்­றும் பெரும்­பா­லா­னோர் சுமார் ஒரு வார காலம் சோர்­வாக உணர்­வர் என்­றும் அவர் தெரி­வித்­தார்.

மருந்­த­கங்­களில் மருத்­து­வர் அறி­வு­ரை­யின்றி மருந்­து­க­ளைப் பெறு­வது கூடாது என்­றும் கொசுத்­தொல்லை அதி­க­மாக இருப்­ப­தால் பொது­மக்­கள் தற்­காப்பு நட­வ­டிக்கை­களை மேற்­கொள்ள வேண்­டும் என்­றும் மருத்­து­வர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

இதற்­கி­டையே சென்னை, அதன் புற­ந­கர்ப் பகு­தி­களில் கொசு ஒழிப்­புப் பணியை மாந­க­ராட்சி தீவி­ரப்­ப­டுத்தி உள்­ளது.

எனினும் கடந்த சில நாள்களாக கொசுத்­தொல்லை அதி­க­ரித்­தி­ருப்­ப­தாக பொது­மக்­கள் கூறு­கின்­ற­னர்.