தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குழந்தை விற்பனைக் கும்பலைச் சேர்ந்த நான்கு பேர் கைது

2 mins read
7b75e172-9f6d-449e-b90d-ccd4329abc66
-

கட­லூர்: வறு­மை­யில் வாடும் குழந்­தை­களை கணி­ச­மான தொகைக்கு வாங்கி வெளியே விற்­பனை செய்து வந்த நான்கு பேர் கொண்ட கும்­பலை கட­லூர் காவல்­து­றை­யி­னர் கைது செய்­துள்­ள­னர்.

இது­வரை நான்கு குழந்­தை­களை இந்­தக் கும்­பல் விற்­பனை செய்­தி­ருப்­பது விசா­ர­ணை­யில் தெரிய வந்­துள்­ளது.

கட­லூர் மாவட்­டம் வட­லூ­ரில் சித்தா மருத்­து­வ சிகிச்சை­ய­கம் நடத்தி வரு­ப­வர் மெஹர்­னிசா. 67 வய­தான இவர் தம்மை சித்த மருத்­து­வர் எனக்­கூறி வந்­துள்­ளார்.

மருத்­து­வர் என்ற போர்­வை­யில் இவர் குழந்தை விற்­ப­னைத் தொழி­லில் ஈடு­பட்டு வந்­தது அம்­ப­ல­மாகி உள்­ளது.

அவ­ரது ஏற்­பாட்­டில் நான்கு பேர்­கொண்ட கும்­பல் செயல்­பட்டு வந்­துள்­ளது.

குடும்ப வறுமை, சூழ்­நிலை கார­ண­மாக பெற்­றெ­டுத்த குழந்­தை­களை வளர்க்க முடி­யா­மல் தவிக்­கும் தம்­ப­தி­யரை அணுகி, மூளைச் சலவை செய்து, அவர்­க­ளி­டம் இருந்து குழந்­தை­க­ளைப் பெற்­றுள்­ளார் மெஹர்­னிசா. இதற்­காக ஒரு தொகை­யை­யும் கொடுத்து வந்­துள்­ளார்.

இந்­நி­லை­யில், வட­லூரைச் சேர்ந்த சுடர்­விழி (வயது 37) என்ற பெண்­மணி சந்­தே­கத்­திற்­கு­ரிய வகை­யில் இரண்டு மாதக் குழந்தை ஒன்றை வைத்­துள்­ள­தாக கட­லூர் மாவட்ட குழந்­தை­கள் உதவி மையத்­துக்கு ஒரு தக­வல் வந்­துள்­ளது. இதை­ய­டுத்து மாவட்ட குழந்தை பாது­காப்பு அலு­வ­லர் துரித கதி­யில் நட­வ­டிக்கை மேற்­கொண்­டார்.

விசா­ர­ணை­யில், அந்த குழந்­தை­யின் உண்­மை­யான தாய் அல்ல என்­ப­தும், அவர் மெஹர்­னி­சா­வி­டம் இருந்து ரூ.3.5 லட்­சத்­துக்கு அக்­கு­ழந்­தையை வாங்­கி­யுள்­ளார் என்­ப­தும் தெரி­ய­வந்­தது.

இதை­ய­டுத்து குழந்தை விற்­பனைக் கும்­பல் காவல்­துறை யிடம் சிக்­கி­யது. அவர்­க­ளி­டம் கட­லூர் காவல்­து­றை­யி­னர் தற்­போது தீவிர விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர்.