பயங்கரவாதப் பயிற்சி பெற பாகிஸ்தான் செல்லத் திட்டம்: தமிழ்நாடு ஆடவர் உட்பட இருவர் டெல்லியில் கைது

பயங்கரவாதப் பயிற்சி பெற பாகிஸ்தான் செல்லத் திட்டம்: தமிழ்நாடு ஆடவர் உட்பட இருவர் டெல்லியில் கைது

1 mins read
a1314996-5fdc-45c5-8f29-e10256076ea6
-

புது­டெல்லி: பயங்­க­ர­வாதச் செயல்­களில் ஈடு­ப­டு­வ­தற்­காக பாகிஸ்­தான் சென்று ஆயு­தப் பயிற்சி மேற்­கொள்ள இருந்த தமி­ழ்நாடு ஆட­வர் உள்­பட இரு­வர் டெல்லி காவல்­து­றை­யி­டம் சிக்­கி­னர். அவர்­களில் ஒரு­வர் தமி­ழ­கத்­தைச் சேர்ந்­த­வர்.

இது தொடர்­பாக கடந்த 14ஆம் தேதி காவல்­து­றைக்கு ரக­சி­யத் தக­வல் கிடைத்­தது.

இதை­ய­டுத்து டெல்லி காவல்­து­றை­யின் சிறப்­புப் பிரிவு அதி­காரி­கள் கண்­கா­ணிப்பு நட­வடிக்கை­களை தீவி­ரப்­ப­டுத்­தி­னர்.

இந்­நி­லை­யில், டெல்லி செங்­கோட்டை பகு­தி­யி்ல் சந்­தே­கத்­துக்­கு­ரிய வகை­யில் நட­மா­டிய இரு ஆட­வர்­களை மடக்­கிப்­பிடித்த காவல்­து­றை­யி­னர் அவர்­க­ளி­டம் தீவிர விசா­ரணை மேற்­கொண்டனர்.

அப்­போது, பிடி­பட்ட இரு­வ­ரில் ஒரு­வ­ரது பெயர் அப்­துல்லா என்­ப­தும் 26 வய­தான அவர் தமி­ழகத்­தைச் சேர்ந்­த­வர் என்­ப­தும் தெரிய­ வந்­தது.

மற்­றொ­ரு­வர் மகா­ராஷ்­டி­ராவைச் சேர்்ந்த காலித் முபா­ரக் கான் (21 வயது) என்­பது உறு­தி­யா­னது.

பாகிஸ்­தா­னில் உள்ள பயங்­க­ர­வாத அமைப்­பு­க­ளைச் சேர்ந்­த­வர்­கள் இவ்­வி­ரு­வ­ரை­யும் சமூக ஊட­கங்­கள் மூலம் தொடர்பு கொண்டு மூளைச் சலவை செய்­துள்­ள­னர் என்­றும் இறு­திக்­கட்­ட­மாக பாகிஸ்­தா­னுக்கு நேர­டி­யாக சென்று ஆயு­தப் பயிற்சி மேற்­கொள்ள அழைப்பு விடுத்­துள்­ள­னர் என்­றும் டெல்லி காவல்­துறை கூறி­யது.

"நாட்­டின் பல்­வேறு பகு­தி­களில் பயங்­க­ர­வாதத் தாக்­கு­தல்­களை நிகழ்த்த இரு­வ­ரும் திட்­ட­மிட்­டி­ருந்­த­னர். அவர்­க­ளி­டம் இருந்து இரண்டு கைத்­துப்­பாக்கி, பத்துத் தோட்­டாக்­கள், ஒரு கத்தி உள்­ளிட்­டவை கைப்­பற்­றப்­பட்­டுள்­ளன. ஆயுதச் சட்­டத்­தின்­கீழ் இருவர் மீதும் வழக்­குப் பதி­வாகி உள்­ளது," என காவல்­துறை அறிக்கை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.