இன்று இடைத்தேர்தல்: ஈரோட்டில் இறுதிக்கட்ட தில்லுமுல்லு

இன்று இடைத்தேர்தல்: ஈரோட்டில் இறுதிக்கட்ட தில்லுமுல்லு

1 mins read

ஈரோடு: ஈரோடு கிழக்­குத் தொகுதிக்­கான வாக்­குப்­ப­திவு இன்று நடை­பெற உள்ள நிலை­யில், அங்கு வாக்­கா­ளர்­க­ளுக்கு தங்­கக் காசு­களும் மூக்­குத்­தி­களும் விநி­யோ­கிக்­கப்­பட்­ட­தாக புகார்­கள் எழுந்­துள்­ளன.

வீடு­கள்தோறும் வாக்­கா­ளர்­களின் எண்­ணிக்­கைக்கு ஏற்ப தலா மூவா­யி­ரம் ரூபாய் வழங்கப்­ப­டு­வ­தா­க­வும் குக்­கர், கைக்க­டி­கா­ரம், வேட்டி, சேலை, வீட்டு உப­யோ­கப் பொருள்­கள் எனப் பல்­வேறு இல­வ­சப் பொருள்­கள் வழங்­கப்­பட்­ட­தாகவும் ஊட­கச் செய்­தி­கள் தெரி­விக்­கின்­றன.

குறிப்­பிட்ட அர­சி­யல் கட்சி சார்­பாக அகல் விளக்கு, வெள்­ளித்­தட்டு, பட்­டுச்­சே­லை­கள் விநி­யோ­கிக்­கப்­பட்­ட­தா­கக் கூறப்­படும் நிலை­யில், நேற்று முன்தினம் நள்­ளி­ரவு வரை வாக்­கா­ளர்­க­ளின் ஆத­ர­வைப் பெற அர­சி­யல் கட்­சி­கள் தீவிர முயற்சி­களை மேற்­கொண்­ட­தாகக் கூறப்­ப­டு­கிறது.

இதற்­கி­டையே, இன்று நடை­பெற உள்ள வாக்­குப்­ப­திவை அடுத்து, ஈரோடு கிழக்­குத் தொகுதி முழு­வ­தும் காவல்­துறை­யின் பாது­காப்பு வளை­யத்­துக்குள் கொண்டு வரப்­பட்­டுள்­ளது.

தேர்­தல் பறக்­கும் படை­யினரின் கண்­கா­ணிப்­பை­யும் மீறி வாக்­கா­ளர்­க­ளுக்­குப் பணம் விநி­யோ­கிக்­கப்­பட்­ட­தாக குற்­றம்­சாட்டி உள்ள அறப்­போர் இயக்­கத்­தி­னர், இடைத்­தேர்­தலை ரத்து செய்ய வேண்­டும் என வலி­யு­றுத்தி உள்­ள­னர்.

வாக்­கா­ளர்­களை ஓரி­டத்­தில் அடைத்து வைத்து தின­மும் 500 ரூபாய் வழங்­கப்­பட்­ட­தா­கவும் அந்த இயக்­கம் சுட்­டிக்­காட்டி உள்­ளது.