தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அருவியில் விழுந்த குழந்தையைக் காப்பாற்றிய இளையர்; ஓட்டுநர் பணி வழங்கிய ஆட்சியர்

1 mins read
f4814c11-3d14-4d1e-a7c0-eb01ae61d4b6
-

தூத்­துக்­குடி: அரு­வி­யில் விழுந்த குழந்­தை­யைக் காப்­பாற்­றிய இளை­யரை நேரில் பாராட்­டிய தூத்­துக்­குடி மாவட்ட ஆட்­சி­யர், அந்த இளை­யரை தனது கார் ஓட்­டு­நரா­க­ நிய­மித்­துள்­ளார்.

விளாத்­திக்­கு­ளம் பகு­தி­யைச் சேர்ந்த 24 வய­தான விஜ­ய­கு­மார் (படம்) என்ற இளை­யர் கார் ஓட்டு­ந­ரா­கப் பணி­யாற்றி வரு­கி­றார்.

கடந்த ஆண்டு சுற்­றுலாப் பயணி­க­ளு­டன் குற்­றா­லத்­துக்­குச் சென்­றி­ருந்­தார் விஜ­ய­கு­மார். அப்­போது கேர­ளா­வைச் சேர்ந்த ஹரிணி என்ற குழந்தை தனது குடும்­பத்­தா­ரு­டன் ஆற்­றில் குளித்­துக்கொண்­டி­ருந்­தது.

அப்­போது எதிர்­பா­ரா­த­வி­த­மாக அருவி நீரில் அடித்­துச் செல்­லப்­பட்ட குழந்தை ஹரிணி பாறை­களுக்கு இடை­யில் சிக்­கிக் கொண்­டது. இதைக் கவ­னித்த விஜ­ய­கு­மார், சற்­றும் தாம­திக்­காமல் தாம் இருந்த பெரிய பாறை­யில் இருந்து கீழே குதித்து, குழந்­தையை மீட்­டுள்­ளார். ஆபத்­தான பாறை­க­ளின் மீது ஏறிச் சென்று குழந்­தையை மீட்டு வந்த அவ­ருக்­குப் பாராட்­டு­கள் குவிந்­தன.

இந்­தச் சம்­ப­வத்தை கைப்

பே­சி­யில் படம்­பி­டித்த சிலர், பின்­னர் சமூக ஊட­கங்­களில் பதி­வேற்­றி­னர். அந்­தக் காணொ­ளி­யைப் பார்த்த தூத்­துக்­குடி மாவட்ட ஆட்­சி­யர் செந்­தில்­ராஜ், உட­ன­டி­யாக விஜ­ய­கு­மாரை நேரில் வர­வழைத்து சால்வை அணி­வித்து பாராட்­டி­னார்.

அசச்­ச­ம­யம் வாகனம் ஓட்­டும் உரி­மம் இருந்­தும் தமக்கு நல்ல ஊதி­யத்­து­டன் வேலை கிடைக்­க­வில்லை என்­றும் தமக்கு உத­வு­மா­றும் ஆட்­சி­ய­ரி­டம் கோரிக்கை விடுத்­தார் விஜ­ய­கு­மார். இதை­யடுத்து ஆட்­சி­யர் செந்­தில்­ராஜ் தனது வாகன ஓட்­டு­ந­ராக விஜ­ய­கு­மாரை நிய­மித்­துள்­ளார்.

மேலும் தமது செல­வி­லேயே விஜ­ய­கு­மா­ருக்­கான சீருடை, காலணி­களை வாங்­கிக் கொடுத்­துள்­ளார். இதை­ய­டுத்து ஆட்­சி­யருக்­கும் சமூக ஊடகங்களில் பாராட்­டு­கள் குவி­கின்­றன.