இயற்கைச் சீற்றங்களுக்கு தாக்குப்பிடித்த 109 வயது பாம்பன் பாலத்துக்கு ஓய்வு

2 mins read
60d189fb-b8ab-4405-9065-255e567cde7c
-

ராமே­சு­வ­ரம்: கடந்த 109 ஆண்டு­களாக செயல்­பாட்­டில் இருந்த பாம்பன் ரயில் பாலம் இனி நிரந்­த­ர­மாக மூடப்­படும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. கடும் மழை, பெரும் புயல் உள்­ளிட்ட பல்­வேறு இயற்கைச் சீற்­றங்­க­ளுக்கு மத்தியில் தாக்­குப்­பி­டித்த பாம்­பன் பாலம் இனி பயன்­ப­டுத்­தப்­பட முடி­யாத அள­வுக்கு வலு­வி­ழந்­து­விட்­ட­தாக நிபு­ணர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

ஆங்­கி­லேயர் ஆட்­சிக் காலத்­தின்­போது கடந்த 1913ஆம் ஆண்டு கட்டி முடிக்­கப்­பட்­டது பாம்­பன் பாலம்.

முன்­ன­தாக, 1902ஆம் ஆண்டு பாலம் கட்­டும் பணி­கள் துவங்­கப்­பட்­டன. இதற்­குத் தேவைப்பட்ட அனைத்து வகை­யான கட்டு­மானப் பொருள்­களும் இங்கிலாந்­தில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்­பட்­டன.

பின்­னர் அங்­கி­ருந்து சிறு கப்­பல்­கள் மூலம் ராம­நா­த­பு­ரம் மாவட்­டம் மண்­ட­பம் பகு­திக்கு அவை அனுப்பி வைக்­கப்­பட்­டன.

நடுக்­க­ட­லில் கப்­பல்­கள் கடந்து செல்­லும்­போது திறந்து வழி­வி­டும் வகை­யில் தூக்­குப் பாலத்­து­டன் கூடிய 'டபுள் லீப் கேண்­டி­லீ­வர்' வகை பாலம் அமைக்­கப்­பட்­டது.

பாலத்தை வடி­வ­மைத்த ஜெர்­மா­னி­ய­ரான பொறி­யி­ய­லா­ளர் ஷெர்­ஜர் என்­ப­வ­ரின் பெய­ரால் அப்­பா­லம் அழைக்­கப்­பட்டு வந்தது. 1914ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் பாம்பன் பாலம் பயன்­பாட்­டுக்கு வந்­தது. அதே நாளில்­தான் தனுஷ்­கோடி, இலங்­கை­யின் தலை­மன்­னார் நக­ரங்­க­ளுக்கு இடையே கப்­பல் போக்­கு­வ­ரத்­தும் துவங்­கி­யது.

பாம்­பன் பாலத்தை கட்­டமைத்த ஆங்­கி­லேய பொறி­யா­ளர்­கள் அப்­போது நூறு ஆண்டு உத்­த­ர­வாதத்தை வழங்­கி­யி­ருந்­த­னர். அதை­யும் கடந்து 109 ஆண்­டு­கள் இயங்கி வந்­துள்­ளது அப்­பா­லம்.

பாலம் அமைந்­துள்ள பகுதியில் அண்­மை­யில் ஏற்­பட்ட அதிர்வு­கள், சென்­சார் கருவி விடுத்த எச்­ச­ரிக்கை ஆகி­ய­வற்­றைக் கவ­னத்­தில் கொண்டு பாம்­பன் பாலத்­தில் ரயில்­கள் செல்­வது நிறுத்­தப்­பட்­டது. இனி­மே­லும் ரயில் போக்கு­வ­ரத்­துக்கு அப்­பா­லத்­தைப் பயன்­ப­டுத்­தி­னால் விபத்து ஏற்­படு­வ­தற்­கான சாத்­தி­ய­க்கூ­று­கள் அதி­க­ரித்­துள்­ளன.

இதை­ய­டுத்தே அப்­பா­லத்­துக்கு நிரந்­தர ஓய்வு கொடுக்­கும் முடிவை இந்­தி­யன் ரயில்வே நிர்வா­கம் எடுத்­துள்­ளது.

பல கால­கட்­டங்­களில் விபத்து, புயல் உள்­ளிட்ட பல்­வேறு காரணங்­க­ளால் பாம்­பன் பாலம் மூடப்­பட்­டி­ருக்­கிறது. கொரோனா நெருக்­க­டி­யின் ­போ­து­தான் நீண்ட காலம் பாலத்­தில் ரயில்­கள் இயக்­கப்­ப­ட­வில்லை.

இனி, அப்­பா­லத்­தில் ரயில்­கள் அறவே செல்­லாது என்ற அறிவிப்பு ராம­நா­த­பு­ரம் மக்­களை சோகத்­தில் ஆழ்த்­தி­யுள்­ளது.