வாக்குவாதங்கள், மறியல் போராட்டத்துக்கு மத்தியில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு

வாக்குவாதங்கள், மறியல் போராட்டத்துக்கு மத்தியில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு

1 mins read

ஈரோடு: வாக்­கு­வா­தங்­கள், மறி­யல் போராட்­டத்­துக்கு மத்­தி­யில் ஈரோடு கிழக்­குத் தொகுதி வாக்­குப்­ப­திவு நடந்­தேறி உள்­ளது.

பலத்த பாது­காப்பு ஏற்­பாட்­டுக்கு மத்­தி­யில் நடை­பெற்ற வாக்­குப்­ப­தி­வின்­போது சில இடங்­களில் அர­சி­யல் கட்­சி­யி­ன­ருக்கு இடையே வாக்­கு­வா­தங்­கள் மூண்­டன.

பெரி­யார் நகர் பகு­தி­யில் வாக்­குச்­சா­வ­டிக்கு அருகே வாக்­குச்­சே­க­ரிப்­பில் ஈடு­பட்­ட­தாக அதி­முக, திமுக நிர்­வா­கி­கள் ஒரு­வ­ரை­யொ­ரு­வர் குற்­றம்­சாட்­டி­னர். அதே­போல், அதி­முக, நாம் தமி­ழர் கட்சி வேட்­பா­ளர்­கள் வாக்­குச்­சா­வ­டிக்கு மிக அரு­கில் வாக்­கு­கள் சேக­ரித்­த­தாக திமு­க­வி­னர் குற்­றம்­சாட்­டி­னர்.

மேலும், சில வாக்­குச்­சா­வ­டி­களில் கட்­சித்­துண்­டு­க­ளு­டன் சில கட்சி நிர்­வா­கி­கள் வலம் வந்­த­தும் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யது.

கருங்­கல்­பா­ளை­யம் வாக்­குச்­சா­வ­டி­யில் வாக்­க­ளிக்க மூன்று மணி நேரம் காத்­தி­ருந்த வாக்­கா­ளர்­கள் சாலை மறி­யல் போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர்.

நீண்ட நேர­மாக வாக்­க­ளிக்க காத்­தி­ருந்த ஒரு பெண் திடீ­ரென மயங்கி விழுந்­த­தால் மற்ற வாக்­கா­ளர்­கள் கோப­ம­டைந்­த­னர். வேண்­டும் என்றே தாம­தத்தை ஏற்­ப­டுத்தி தங்­களை வாக்­க­ளிக்­க­வி­டா­மல் செய்­த­தாக அந்த வாக்­கா­ளர்­கள் புகார் தெரி­வித்­த­னர்.