விபத்து; மூன்று மாணவர்கள் ஐந்து பெண்கள் உயிரிழப்பு

விபத்து; மூன்று மாணவர்கள் ஐந்து பெண்கள் உயிரிழப்பு

1 mins read
43093828-2afb-4aa6-a152-0076b43c5fdc
-

மிதி­வண்­டி­யில் பள்­ளிக்­குச் சென்று கொண்­டி­ருந்த மாண­வர்­கள் மீது கார் மோதிய விபத்­தில் மூன்று பேர் பலி­யான சம்­ப­வம் திருப்­பத்­தூர் மாவட்­டத்தில் சோகத்தை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

நேற்று முன்­தி­னம் வாணி­யம்­பாடி அருகே தேசிய நெடுஞ்­சாலை­யை­யொட்டி உள்ள சர்­வீஸ் சாலை­யில் 13 வய­தே­யான எட்டாம் வகுப்பு மாண­வர்­க­ளான வெற்றி, விஜய், சஃபீக் ஆகிய மூவ­ரும் மிதி­வண்­டி­யில் சென்று கொண்­டி­ருந்­த­னர். அப்­போது பெங்­க­ளூரு நோக்கி நெடுஞ்­சாலை­யில் வந்து கொண்­டி­ருந்த கார் ஒன்று திடீ­ரென கட்­டுப்­பாட்டை இழந்து தாறு­மாக ஓடியது.

பின்­னர், சாலைத் தடுப்பு­களை உடைத்­துக்­கொண்டு, சர்வீஸ் சாலை­யில் பாய்ந்த அந்­தக் கார், மிதி­வண்­டி­யில் சென்று­கொண்­டி­ருந்த பள்ளி மாண­வர்­கள் மீது வேக­மாக மோதி­யது.

இதில் மூன்று மாண­வர்­களும் ரத்த வெள்­ளத்­தில் துடி­து­டித்து உயி­ரி­ழந்­த­னர். மற்ற மாண­வர்­கள் சிதறி ஓடி­னர். விபத்து குறித்து அறிந்த மாண­வர்­க­ளின் பெற்றோர், உறவினர்கள் பத­றி­ய­டித்­துக் கொண்டு விபத்­துப் பகு­திக்கு வந்து சேர்ந்­த­னர். ரத்த வெள்­ளத்­தில் குழந்­தை­கள் பலி­யா­கிக் கிடப்­ப­தைக் கண்டு அவர்­கள் கதறி அழுதனர்.

இதற்­கி­டையே, நாமக்­கல் மாவட்­ட­ம் பர­மத்­தி­வே­லூர் அருகே சாலை­யோ­ரம் நின்­று­கொண்டு இருந்த கொள்­க­லன் லாரி மீது கார் மோதிய விபத்­தில் கோவி­லுக்­குச் சென்று­விட்டு வீடு திரும்­பிக்கொண்டு இருந்த ஐந்து பெண்­கள் பரி­தா­ப­மாக உயி­ரி­ழந்­த­னர்.