ஆசிய உள்கட்டமைப்பு வங்கி உதவியுடன் கல்லணை கால்வாய் புனரமைப்புப் பணி

ஆசிய உள்கட்டமைப்பு வங்கி உதவியுடன் கல்லணை கால்வாய் புனரமைப்புப் பணி

1 mins read

தஞ்சை: கல்­ல­ணைக் கால்­வாயில் மூன்­றாம் கட்ட புனரமைப்புப் பணி­கள் தீவி­ர­மாக நடை­பெற்று வரு­வ­தாக தமி­ழக அரசு தெரி­வித்­துள்­ளது. ஆசிய உள்­கட்­ட­மைப்பு முத­லீட்டு வங்கி­யின் நிதி­யு­த­வி­யோடு இந்­தப் பணி­கள் நடை­பெ­று­கின்­றன.

ஆண்­டு­தோ­றும் ஜூன் மாதம் கல்­லணை கால்­வா­யில் இ­ருந்து பாச­னத்­துக்­காக தண்­ணீர் திறந்து­வி­டப்­படும். எனவே புன­ரமைப்­புப் பணி­களை அதற்­குள் முடித்­து­விட வேண்­டும் என இலக்கு நிர்­ண­யிக்­கப்­பட்டு, அதற்­கான பணி­கள் துரித கதி­யில் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன.

தஞ்­சா­வூர் மாவட்­டம் கல் லணை­யி­ல் இ­ருந்து பூத­லூர், தஞ்­சா­வூர், ஒரத்­த­நாடு, பட்­டுக்­கோட்டை, பேரா­வூ­ரணி வழி­யாக புதுக்­கோட்டை மாவட்­டம் அறந்­தாங்கி பகுதி வரை 148 கிலோ மீட்­டர் தொலை­வுக்கு கல்­லணைக் கால்­வாய் செல்­கிறது. இதன் மூலம் 2.27 லட்­சம் ஏக்­கர் பாசன வசதி பெறு­கிறது.

இந்­நி­லை­யில் கரை­யோ­ரப் பகு­தி­களில் ஏற்­பட்ட உடைப்பு, விரி­சல்­கள் கார­ண­மாக கடை­மடைப் பகு­தி­க­ளுக்குத் தண்­ணீர் செல்­வ­தில்லை என்­றும் உரிய புன­ரமைப்புப் பணி­களை மேற்­கொள்ள வேண்­டும் என்­றும் விவ­சா­யி­கள் கோரிக்கை விடுத்­த­னர்.

அதை ஏற்று கல்­ல­ணைக் கால்­வாயை 16 தொகுப்­பு­க­ளாக புன­ர­மைப்பு செய்ய திட்­டம் வகுக்­கப்­பட்­டது. ஆசிய உள்­கட்­ட­மைப்பு முத­லீட்டு வங்கி இதற்கு நிதி­யு­தவி செய்­கிறது.

திட்­டப் பணிக்­காக ரூ.2,639.15 கோடி ஒதுக்­கீடு செய்­யப்­பட்ட நிலை­யில், மூன்று ஆண்­டு­க­ளுக்­குள் பணி­களை முடிக்க இலக்கு நிர்­ண­யிக்­கப்­பட்­டது.