'ஏற்றமிகு ஏழு' திட்டங்களை அறிவித்தார் மு.க.ஸ்டாலின்

'ஏற்றமிகு ஏழு' திட்டங்களை அறிவித்தார் மு.க.ஸ்டாலின்

2 mins read
4db480cc-c0b5-4acd-82bb-54446cdbc295
-

"எனக்கான இலக்குகளை நானே நிர்ணயித்துக்கொள்கிறேன்"

சென்னை: தமக்கு யாரும் இலக்­கு­களை நிர்­ண­யிப்­ப­தில்லை என்றும் தமக்­குத் தாமே இலக்­கு­களை நிர்­ண­யித்­துக்கொள்­வ­தா­க­வும் முதல்­வர் மு.க.ஸ்டா­லின் தெரி­வித்­துள்­ளார்.

நேற்று சென்­னை­யில் நடை­பெற்ற விழா­வில் பேசிய அவர், 'ஏற்­ற­மிகு ஏழு' என்று குறிப்­பி­டப்­படும் ஏழு புதிய திட்­டங்­களை தொடங்கி வைத்­தார்.

ஊட்­டச்­சத்து குறை­பாடுள்ள குழந்­தை­க­ளுக்கு சிறப்பு ஊட்டச்­சத்து உணவு வழங்­கும் திட்டம், திரு­நங்­கை­யர்களுக்­கான மாதாந்­திர உத­வித்­தொகை ரூ.1,500ஆக உயர்வு, முதல்­வ­ரின் காலை உணவுத் திட்­டம் ஆகிய திட்­டங்­கள் பல­ருக்­குப் பெரும் உத­வி­யாக இருக்­கும் என்று முதல்­வர் ஸ்டா­லின் குறிப்­பிட்­டார்.

மேலும், மாந­க­ராட்சி, நக ராட்சிப் பகு­தி­களில் விரி­வாக்கம், பல்வேறு அர­சுப்­ப­ணி­களில் தேர்­வா­ன­வர்­க­ளுக்கு பணி நிய­மன ஆணை, ரூ.1,136 கோடி­யில் பல்­வேறு மருத்­து­வ­மனை கட்­ட­டங்­களுக்கு அடிக்­கல் நாட்டுதல், மாற்­றுத்திற­னா­ளி­க­ளுக்கு நலத்­திட்ட உதவி வழங்­கு­தல், சென்னை மாந­கரப் பகு­தி­யில் கழி­வு­நீர் அகற்­றும் பணி­களை நவீ­னப்­படுத்தி, தூய்மைப் பணியாளர்­கள், அவர்­க­ளது குடும்­பத்­தி­னரை தொழில்­மு­னை­வோர்­க­ளாக ஒருங்­கி­ணைத்து மேற்­கொள்­வதற்­கான சிறப்புத் திட்­டம் ஆகிய திட்­டங்­க­ளை­யும் முதல்­வர் நேற்று அறி­வித்­தார்.

"குடி­மக்­கள் அனை­வ­ருக்­கும் குறை­யாத தண்­ணீர், உயர்­தர கல்வி, உயர்­தர மருத்­து­வம் என்ற இலக்கை நோக்­கிய பய­ணத்தை வெற்­றி­க­ர­மாகத் தொடர்ந்து கொண்­டி­ருக்­கி­றோம்.

"தேர்­தல் அறிக்கை தயா­ரிப்­ப­தற்கு முன் முக்­கி­யத் திட்­டங்­கள் குறித்து ஆலோ­சனை நடத்­தி­னோம்.

"மக­ளிர் மேம்­பாட்­டிற்­காக எண்­ணற்ற திட்­டங்­களை திமுக அரசு நிறை­வேற்­றி­யுள்­ளது. இளை­ஞர்­கள் வாழ்க்­கை­யில் ஒளி ஏற்­றும் வகை­யில் உள்ள 'நான் முதல்­வன் திட்­டம்' தமி­ழக மாண­வர்­கள், இளை­யர்­களை கல்வி, சிந்­தனைத் திற­னில் முன்­னேற்ற கொண்டுவரப்­பட்ட திட்­டம்," என்­றார் முதல்­வர் ஸ்டா­லின்.

'நான் முதல்­வர் திட்­டம்' மூலம் கடந்த ஓராண்டு காலத்தில் மட்டும் 17 லட்­சத்­திற்கு அதிகமான திற­மை­சா­லி­க­ளுக்­குப் பயிற்சி அளிக்­கப்­பட்­டுள்­ளது என்­றும் திமுக அரசு இரண்டு லட்­சம் கோடி ரூபாய் மதிப்­பி­லான புதிய முத­லீ­டு­களை ஈர்த்­துள்­ளது என்­றும் முதல்­வர் கூறி­னார்.

அடுத்த பத்து ஆண்­டு­களுக்­கான செயல்திட்­டத்தை ஆட்சிக்கு வரு­வ­தற்கு முன்பே தாம் அறி­வித்­த­தாகக் குறிப்­பிட்ட அவர், தமக்­கான இலக்­கு­களை நிர்­ண­யிப்­ப­து­டன் அவற்றை அடை­வ­தற்­காக எந்­நா­ளும் உழைத்­துக்கொண்­டி­ருப்­ப­தா­கத் தெரி­வித்­தார்.