122 ஆண்டுகளில் இல்லாத வெப்பநிலை பதிவு

122 ஆண்டுகளில் இல்லாத வெப்பநிலை பதிவு

2 mins read
9c50f854-0196-4670-a742-c9678086c53d
-

தமிழகத்தில் கோடை மழை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் கணிப்பு

சென்னை: கடந்த 122 ஆண்­டு­களில் இல்­லாத வகை­யில் தமி­ழ­கத்­தில் வெப்பநிலை அதி­க­ரித்­துள்­ள­தாக சென்னை வானிலை ஆய்வு மையத்­தின் தென் மண்­டல இயக்­கு­நர் பாலச்­சந்­தி­ரன் தெரி­வித்­துள்­ளார்.

சென்­னை­யில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், நடப்­பாண்­டில், தமி­ழ­கத்­தில் மாா்ச் மாதம் தொடங்கி மே மாதம் வரை­யி­லான கோடை காலத்­தில் வெயி­லின் தாக்­கம் அதி­கம் இருக்­கும் என்­றார்.

கடல் நீர் மட்­டத்­தைப் பொறுத்­த­வரை கட­லூர், விசா­கப்­பட்­டி­னம், சென்­னை­யில் வெவ்­வேறு வித­மாக உயர்ந்து வரு­வ­தா­லும் துரு­வப் பகு­தி­களில் பனிக்­கட்­டி­கள் உருகி வரு­வ­தா­லும் வெப்­ப­நிலை அதி­க­ரிப்பு நில­வு­வ­தாக தெரி­வித்­தார்.

"பொது­வாக, ஜன­வரி, பிப்­ர­வரி மாதங்­களை நாம் குளிர்­காலங்­களாக கரு­து­வோம். ஆனால் தற்­போது, கடந்த 122 ஆண்­டு­களில் இல்­லாத அள­வுக்கு அதி­க­பட்ச வெப்­ப­நிலை பதி­வாகி உள்­ளது. கோடை காலத்­தில் கோடை மழை பெய்ய நிறைய வாய்ப்பு இருக்­கிறது.

"நிக­ழாண்­டில் இந்த மாதங்­களில் கட­லோர மாவட்­டங்­களில் வெப்­பத்­தின் தாக்­கம் இயல்­பை­விட சற்று அதி­க­மாக இருக்­கும். அதே­நே­ரத்­தில் தமி­ழ­கத்­தின் உள் மாவட்­டங்­களில் இயல்பை ஒட்­டியே இருக்­கும். மேலும் தரை, கடல் காற்று இடை­வெளி ஏற்­படும்­போது கோடை மழை பெய்­யும்," என்­றார் பாலச்­சந்­தி­ரன்.

இதற்­கி­டையே, கோடை காலம் தொடங்­கும் முன்பே தமி­ழ­கத்­தின் பல்­வேறு பகு­தி­களில் வெயி­லின் தாக்­கம் அதி­க­ரித்து வரு­கிறது. இத­னால் தர்ப்­பூ­சணி, வெள்­ள­ரிப் பிஞ்சு, இள­நீர் விற்­பனை சூடு­பிடித்­துள்­ளது.

பல்­வேறு இடங்­களில் தள்­ளு­வண்­டி­கள், கடை­களில் வைத்து இவற்றை விற்­கும் வியா­பா­ரி­கள் நல்ல லாபம் பார்த்து வரு­கின்­ற­னர். அதே­ச­ம­யம், வரும் நாள்­களில் முந்­தைய ஆண்­டு­க­ளை­விட இவற்­றின் விலை கணி­ச­மாக அதி­க­ரிக்­கும் என்­றும் எதிர்­பார்ப்­ப­தாக அவர்­கள் கூறு­கின்­ற­னர்.