தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கச்சத்தீவு விழா நிறைவு

1 mins read
759d3d0c-66ba-4665-a0ad-322f7f114ec9
-

ராம­நா­தபுரம்: கச்­சத்­தீவு புனித அந்­தோ­ணி­யார் திரு­விழா நேற்று மாலை நிறை­வ­டைந்­தது. இலங்கை, இந்­திய பக்­தர்­கள் இதில் திர­ளா­கக் கலந்து கொண்­ட­னர். இம்­முறை 2,408 பேர் தமி­ழ­கத்­தில் இருந்து அங்கு சென்­ற­னர்.

இந்த ஆண்டு ஆல­யத் திரு­வி­ழாவை நெடுந்­தீவு பங்­குத்­தந்தை நேற்று முன்­தி­னம் மாலை ஆல­யக்­கொ­டியை ஏற்றி தொடங்கி வைத்­தார்.

இலங்கை மீன்­வ­ளத் துறை அமைச்­சர் டக்­ளஸ் தேவா­னந்தா, யாழ்ப்­பா­ணம் மறை மாவட்ட ஆயர் ஜோசப் தாஸ் ஜெப­ரத்­தி­னம், ராமே­சு­வ­ரம் வேர்க்­கோடு பங்­குத்­தந்தை தேவ­ச­கா­யம் ஆகி­யோர் முன்­னிலை வகித்­த­னர்.

இம்­முறை ஐந்­தா­யி­ரத்­துக்­கும் மேற்­பட்ட பக்­தர்­கள் பங்­கேற்­ற­தா­க­வும் இவர்­கள் அனை­வ­ருக்­கும் சிறப்பு அடை­யாள அட்­டை­கள் வழங்­கப்­பட்­ட­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது.

வெள்­ளிக்­கி­ழமை அதி­காலை முதல் ராமே­சு­வ­ரம் மீன்­பி­டித் துறை­மு­கத்­தில் பக்­தர்­கள் குவிந்­த­னர். அவர்­கள் அனை­வ­ருக்­கும் உயிர் காக்­கும் கவச உடை­கள் வழங்­கப்­பட்­ட­தா­க­வும் கச்­சத்­தீவு செல்­லும் பக்­தர்­க­ளின் பட­கு­களை ராம­நா­த­பு­ரம் ஆட்­சி­யர் கொடி­ய­சைத்து அனுப்பி வைத்­த­தா­க­வும் ஊட­கச் செய்­தி­கள் தெரி­விக்­கின்­ற­னர்.

நேற்று கூட்­டுப் பிரார்த்­த­னைக்­குப் பின்­னர் கொடி­யி­றக்­கத்­து­டன் விழா முடி­வ­டைந்­தது.