சென்னை: இலங்கைத் தமிழர்களுக்கான முகாம் களில் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்க ரூ.10 கோடியும் அம்முகாம்களின் பராமரிப்புச் செலவுகளுக்கு ரூ.5 கோடியும் ஒதுக்கப்பட்டு உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், முதல்வர் பிறந்தநாளை ஒட்டி, முகாம் தலைவர்கள், ஆலோசனைக் குழு உறுப்பினர் ஆகியோர் அவரைச் சந்தித்துள்ளனர்.
ஒன்பது மாவட்டங்களில் உள்ள இலங்கை காம்களின் தலைவர்கள் முதல்வருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளும் முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கைத் தரம், கல்வி தொடர்பாக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருவதற்கு நன்றியும் தெரிவித்ததாக தமிழக அரசு நேற்று முன்தினம் வெளியிட்ட செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

