முதல்வர்: திமுக கூட்டணியை யாராலும் உடைக்க முடியாது

1 mins read

சென்னை: ஈரோடு கிழக்­குத் தொகுதி இடைத்­தேர்­த­லில் திமுக கூட்­ட­ணிக்கு கிடைத்­துள்ள வெற்றி­யா­னது, ஒற்­று­மைக்கு கிடைத்த வெற்றி என்று முதல்­வர் மு.க.ஸ்டா­லின் தெரி­வித்­துள்­ளார்.

சென்­னை­யில் நேற்று முன்­தினம் நடை­பெற்ற நிகழ்ச்சி ஒன்­றில் பேசிய அவர், எவ்­வ­ளவு முயன்­றா­லும் திமுக கூட்­ட­ணி­யில் ஒரு­போ­தும் பிளவு ஏற்­ப­டுத்த முடி­யாது என்­றார்.

"பொது­வு­டைமை இயக்­கத்­துக்­கும் திமு­க­வுக்­கும் இடையே நெருங்­கிய நட்­பு­றவு உள்­ளது. நட்பு கார­ண­மாக ஒரே அணி­யா­கச் செயல்­ப­டு­கி­றோம். இந்த அணியா­னது, ஜன­நா­ய­கம் காக்க எப்­போ­தும் இணைந்து செயல்­பட வேண்­டும்," என்­றார் முதல்­வர் மு.க.ஸ்டா­லின்.

தமி­ழ­கத்­தில் மட்­டும் இவ்­வாறு வெற்றி பெற்­றால் போதாது என்று குறிப்­பிட்ட அவர், நாடு முழு­வ­தும் வெற்­றி­க­ளைப் பெற வேண்­டும் என்­றும் மத­வாத, வகுப்­பு­வாத சக்தி­கள் வீழ்த்­தப்­பட வேண்­டும் என்­றும் தெரி­வித்­தார்.

தமி­ழ­கத்­தில் உள்ள ஒற்­றுமை அனைத்து மாநி­லங்­க­ளி­லும் உரு­வா­னால்­தான் வெற்றி பெற முடி­யும் என்று வலி­யு­றுத்­திய அவர், இளை­யர்­க­ளுக்கு இது தொடர்­பாக கொள்கை ரீதி­யில் பயிற்சி அளிக்­கப்­பட வேண்­டும் என்­றார்.

"ஒற்­றுமை கைகள் சேரா­மல் வெற்­றிக் கனி­யைக் பறிக்க முடி­யாது. சில தரப்­பி­னர் கல­வ­ரத்­தைத் தூண்­டி­விட்டு அர­சி­யல் ஆதா­யம் தேட முற்­ப­டு­கி­றார்­கள். அதை அனு­ம­திக்­கக் கூடாது. மதச் சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­ட­ணியை யாரா­லும் உடைக்க முடி­யாது," என்­றார் முதல்­வர்.