197 நாடுகளின் கொடிகளை ஐந்து நிமிடங்களுக்குள் அடையாளம் காணும் தமிழகச் சிறுவன்

1 mins read
ad0d34fd-3a6d-405d-ad72-4bb34dabef05
-

சென்னை: ஐந்து நிமி­டங்­க­ளுக்குள் 197 உலக நாடு­க­ளின் தேசிய கொடி­களை அடை­யா­ளம் கண்டு, தெளி­வா­கச் சொல்­லும் மூன்று வயது தமி­ழ­கச் சிறு­வ­னின் பெயர் உலக சாத­னைப் புத்­த­கத்­தில் இடம்­பெற்­றுள்­ளது.

விழுப்­பு­ரம் மாவட்­டத்­தைச் சேர்ந்த பாரத், சசி­ரேகா தம்­ப­தி­யி­ன­ரின் மக­னான தர்­ஷன் என்ற அச்­சி­று­வன், அண்­மை­யில் நடை­பெற்ற உல­கச் சாதனை நிகழ்­வின்­போது 4.40 நிமி­டங்­களில் 197 நாடு­க­ளின் தேசி­ய கொடி­க­ளைச் சரி­யாக அடை­யா­ளம் கண்டு, பார்­வை­யா­ளர்­களை அசர வைத்­தான்.

இதற்கு முன்பு, இந்­தி­யா­வைச் சேர்ந்த நான்கு வய­துச் சிறு­வன் உலக நாடு­க­ளின் கொடி­களை குறிப்­பிட்ட நேரத்­துக்­குள் அடை­யா­ளம் கண்டு படைத்­தி­ருந்த சாத­னையை, தற்­போது தர்­ஷன் முறி­ய­டித்­துள்­ள­தாக அவ­னது பெற்­றோர் பெரு­மி­தத்­து­டன் குறிப்­பிட்­டுள்­ள­னர்.

டெல்­லி­யில் உள்ள அனைத்­து­ல­கச் சாத­னைப் புத்­தக குழு தங்­கள் மக­னின் சாத­னை­யைப் பாராட்டி சான்­றி­த­ழும் பதக்­க­மும் வழங்கி உள்­ள­தாக சசி­ரேகா தெரி­வித்­தார்.

"விழுப்­பு­ரம் மாவட்ட ஆட்­சி­யர் பழனி நேரில் அழைத்து தர்­ஷ­னுக்கு வாழ்த்து தெரி­வித்­தார். என் மகன் உல­கச் சாத­னையை முறி­ய­டித்­தி­ருப்­பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்­கிறது.

"பெற்றோர்கள் அனைவரும் குழந்தைகளின் திறமைகளை தொடக்கத்திலேயே கண்டறிந்து அவர்களை உரிய வகையில் ஊக்குவிக்க வேண்டும்," என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார் சசிரேகா.