மதுபுட்டிகளுடன் இருசக்கர வாகனங்களில் வலம்வந்த இளையர்களுக்கு நூதனத் தண்டனை

மதுபுட்டிகளுடன் இருசக்கர வாகனங்களில் வலம்வந்த இளையர்களுக்கு நூதனத் தண்டனை

1 mins read

மதுரை: மது­புட்­டி­க­ளு­டன் இரு­சக்­கர வாக­னங்­களில் வலம்­வந்து மது­ரை­யில் பொது­மக்­களை அச்­சு­றுத்­திய மூன்று இளை­யர்­கள், அரசு மருத்­து­வ­மனை நோயா­ளி­களுக்குப் பணி­விடை செய்ய வேண்­டும் என உயர் நீதி­மன்ற மது­ரைக் கிளை நூதனத் தண்­டனை விதித்­துள்­ளது.

அண்­மை­யில் மதுரை அண்ணா­ந­கர் பகு­தி­யில் சில இளை­யர்­கள் இரு­சக்­கர வாக­னங்­களில் சுற்றி வந்து பொது­மக்­க­ளுக்கு அச்­சு­றுத்தலை ஏற்­ப­டுத்­தும் வகை­யில் செயல்­பட்­டது தொடர்­பான காணொ­ளிப் பதி­வு­கள் சமூக ஊட­கங்­களில் வெளி­யா­கின.

இளை­யர்­கள் சாலை­யில் மது அருந்­தி­ய­ப­டியே வாக­னங்­களில் சென்­றது, பொது­மக்­கள் கண்­டித்த போதும் அதைக் கண்­டு­கொள்­ளா­தது, ஒழுங்­கீ­ன­மா­கச் செயல்­பட்­டது எனப் பல்­வேறு காட்­சி­கள் அந்­தக் காணொ­ளிப் பதி­வு­களில் இடம்­பெற்­றி­ருந்­தன.

இது குறித்து அளிக்­கப்­பட்ட புகா­ரின்­பே­ரில் வழக்­குப்­ப­திவு செய்து மதுரை காவல்­து­றை­யி­னர் விசா­ரணை மேற்­கொண்ட நிலை­யில், மூன்று இளை­யர்­கள் பிணை வழங்­கக் கோரி உயர் நீதி­மன்­றத்தை அணு­கி­னர்.

பின்­வி­ளை­வு­கள் குறித்து யோசிக்­கா­மல் தவறு செய்­து­விட்­ட­தா­க­வும் முன்­பிணை வழங்கி உத்­த­ர­விட வேண்­டும் என்­றும் அவர்­கள் தங்­கள் மனு­வில் கோரி­யி­ருந்­த­னர். ஊட­கங்­களில் தங்களைப் பற்­றிய செய்­தி­கள் வெளி­யாகி, அதன் மூலம் பிர­ப­ல­ம­டைய நினைத்து தவறு செய்­து­விட்­ட­தா­க­வும் இளை­யர்­கள் குறிப்­பிட்­டி­ருந்­த­னர். மனுவை விசா­ரித்த நீதி­பதி, மூன்று இளை­யர்­களும் அடுத்­த­டுத்த நான்கு வாரங்­களில் சனிக்­கி­ழ­மை­கள்­தோ­றும், மதுரை அரசு ராஜாஜி மருத்­து­வ­ம­னை­யின் விபத்து சிகிச்­சைப் பிரி­வில் உள்ள நோயா­ளி­களை காலை 8 மணி முதல் மதி­யம் 12 மணி வரை கவனித்­துக்கொள்ள வேண்­டும் என்ற நிபந்­த­னை­யு­டன் முன்­பிணை வழங்கி உத்தரவிட்டார்.