சிறைக்கைதிகளையும் சமூகத்தில் ஒருவராக அங்கீகரிக்க பலகட்ட நடவடிக்கை

2 mins read
2a9816b9-111a-4107-bc0b-0f69b007c357
சிறைக்கைதிகளையும் சமூகத்தில் ஒருவராக அங்கீகரிக்க பலகட்ட நடவடிக்கை கைதிகளுக்கு மறுவாழ்வளிக்க சிறையில் கணினிப் பயிற்சி. படம்: பிக்ஸாபே -

வேலூர்: சிறைக்­கை­தி­க­ளின் திற­மையை மேம்­ப­டுத்தி அவர்­க­ளது வாழ்க்­கை­யி­லும் ஒரு ஒளி­ம­ய­மான எதிர்­கா­லத்­தைக் கொண்டு வரும் வகை­யில், தமி­ழ­கச் சிறை­களில் புதி­தாக கணி­னிப் பயிற்சி மையங்­கள் தொடங்­கப்­பட உள்­ள­தாக சிறைத்­துறை டிஜிபி அம­ரேஷ் புஜாரி தெரி­வித்­துள்­ளார்.

அத்­து­டன், கைதி­க­ளுக்கு 100 விழுக்­காடு அள­வுக்கு முழுமை யான தொழிற்­ப­யிற்சி அளிக்­க­வும் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு வரு­வ­தா­க­வும் அவர் மேலும் கூறி­யுள்­ளார்.

வேலூர் ஆப்­கா­வில் தென்னிந்­திய சிறை அதி­கா­ரி­க­ளுக்கான ஐந்து நாள் கலந்­து­ரை­யா­டல் பயிற்சி முகாம் நேற்று முன்­தி­னம் தொடங்­கி­யது.

அதில் பங்­கேற்ற டிஜிபி அம­ரேஷ் புஜாரி பேசி­ய­போது, "அதி­கா­ரி­கள் தங்­க­ளது பத­வி­களை மறந்து கலந்­து­ரை­யா­ட­லில் பங்­கேற்­பது முக்­கி­யம்.

"சிறைச்­சாலை என்­பது ஒரு பயத்­தைத் தூண்­டும் இட­மாக அல்­லா­மல், கைதி­க­ளுக்கு மறு­வாழ்வு அளிக்­கும் மைய­மா­க­வும் மாற­வேண்­டும்," என்று கூறிய அவர், இதற்­கேற்ப சிறை­வா­சி­கை­ளச் சீர்­தி­ருத்தி, அவர்­க­ளை­யும் சமூ­கத்­தில் ஒரு­வ­ராக அங்கீ கரிக்க உத­வ­வேண்­டும் என்­றார்.

இது­போன்ற நட­வ­டிக்­கை­கள் நார்வே, ஸ்வீ­டன் உள்­ளிட்ட நாடு களில் சிறப்­பா­கச் செயல்­ப­டுத்­தப் படு­கின்­றன. இதே­போல் தமி­ழக சிறை­களில் உள்ள கைதி­க­ளின் வாழ்க்­கை­யும் மேம்­பட வேண்­டும் என்று டிஜிபி அம­ரேஷ் புஜாரி வலி­யு­றுத்தி உள்­ளார்.

தொடர்ந்து செய்­தி­யா­ளர்­களி டம் அவர் பேசி­ய­போது, ''சிறை­வா­சி­க­ளின் சுத்­தம், சுகா­தா­ரத்­துக்கு முக்­கி­யத்­து­வம் அளிக்­கும் வகை­யில் சிறை­களில் கழி­வ­றை­க­ளின் தரைக்­கற்­கள் தர­மாக சீர­மைக்­கப்­பட உள்­ளன.

"மாநி­லத்­தில் உள்ள ஒவ்­வொரு சிறை­யி­லும் கணினி மையங்­கள் தொடங்­கப்­பட உள்­ளன. இங்கு மூன்று அல்­லது ஆறு மாத காலம் பயிற்சி மேற் கொள்­ளும் கைதி­கள், வெளியே சென்­ற­பின் தனி­யாக கணினி மையத்­தைத் தொடங்கி தங்­கள் வாழ்க்­கையை மேம் படுத்­திக்­கொள்­ள­லாம்,'' என்­றார்.

"அத்­து­டன், சிறைச்­சாலைகளில் தொழிற்­ப­யிற்­சி­க­ளைத் திறன்­பட கற்­றுக்­கொள்­ள­வும் கைதி­கள் தயா­ராக உள்­ள­னர்.சூழ்­நிலை கார­ண­மாக குற்­ற­வா­ளி­யாக நிற்­கின்ற அவர்­க­ளது திற­மை­க­ளை­யும் நாம் கருத்­தில் கொள்­ள­வேண்­டும்.

சிறை­வா­சி­கள் புத்­த­கங்­களை அதி­கம் படித்து அறிவை வளர்த்­துக்­கொள்­ள­வேண்­டும்.இதற்­காக ஒரு லட்­சம் புத்­த­கங்­களை இது­வரை பல்­வேறு தரப்­பி­ன­ரும் இல­வ­ச­மாக அளித் துள்­ள­னர். சிறைச்­சா­லை­யில் விளை­யாட்­டுப் பயிற்­சி­யும் இசைக் குழுக்­களும் ஏற்­ப­டுத்­தப்­பட்டு விரை­வில் போட்­டி­களும் நடத்­தப்­பட உள்­ளன.

ஒவ்­வொரு சிறைச்­சாலை யிலும் பூங்­காக்­களை அமைக்க வும் மூலி­கைச் செடி­க­ளைப் பரா­ம­ரிக்­க­வும் ஏற்­பா­டு­கள் நடந்து வரு­கின்­றன. இதன்­மூ­லம் கைதி­க­ளின் மன­நிலை மாறும். அவர்­கள் மீண்­டும் குற்ற வாழ்க்­கைக்கு அடி­யெ­டுத்து வைக்க மாட்­டார்­கள்,'' என்­றும் அம­ரேஷ் புஜாரி நம்­பிக்கைத் தெரி­வித்­துள்­ளார்.