இந்து அறநிலையத்துறை கோயில்களில் தமிழில் குடமுழுக்கு

2 mins read
fe7a8131-da3c-40c9-93a4-cd1f99d5b1dc
-

கருத்துக் கேட்பு கூட்டத்தில் இந்து அமைப்பினர் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

திரு­நெல்­வேலி: சென்னை உயர்­நீ­தி­மன்­றம் மதுரை கிளை ஆணைப்­படி தமிழ்­நாடு இந்து சமய அற­நி­லை­யத்­துறை கட்­டுப்­பாட்­டில் உள்ள கோயில்­களில் தமி­ழில் குட­மு­ழுக்கு நடத்­து­வது தொடர்­பாக திரு­நெல்­வேலி மற்­றும் தூத்­துக்­குடி மண்­டல அள­வி­லான கருத்துக் கேட்பு கூட்­டம் திரு­நெல்­வேலி பாளை­யங்­கோட்­டை­யில் நடை­பெற்­றது.

நீதி­மன்­றம் மூலம் அமைக்­கப்­பட்ட குழு உறுப்­பி­னர்­க­ளான குன்­றக்­குடி பொன்­னம்­பல அடி­க­ளார், பேரூர் ஆதீ­னம் மரு­தாச்­சல அடி­க­ளார், சுகி சிவம் உள்­ளிட்­டோர் கருத்­து­களைக் கேட்க மேடை­யில் அமர்ந்­தி­ருந்­த­னர்.

இதில் நெல்லை, தூத்­துக்­குடி, கன்­னி­யா­கு­மரி, தென்­காசி மாவட்­டங்­க­ளைச் சேர்ந்த பொது­மக்­கள், சமூக ஆர்­வ­லர்­கள், இந்து அமைப்­பி­னர் மற்­றும் சிவ­ன­டி­யார்­கள் தங்­கள் கருத்­து­களைப் பதிவு செய்­வ­தற்­காக வந்­தி­ருந்­த­னர்.

கூட்­டம் தொடங்­கி­ய­தும் சிலர் மேடை அரு­கில் சென்று இந்து அற­நி­லை­யத்­துறை சார்­பில் நடத்­தப்­படும் கருத்துக் கேட்புக் கூட்­டத்­தில் வைக்­கப்­பட்­டுள்ள விளம்­பர பதாகையில் இந்துக் கட­வுள் படம் இடம்­பெ­ற­வில்லை என்று கூறி வாக்­கு­வா­தத்­தில் ஈடு­பட்­ட­னர். அதனை தொடர்ந்து பல்­வேறு இந்து அமைப்­பி­ன­ரும் கட­வுள் படம் வைக்க கோரி கூச்­சல் குழப்­பத்­தில் ஈடு­பட்­ட­னர். அப்­போது அங்­கி­ருந்த தமிழ் தேசிய தன்­னு­ரிமை கட்சித் தலை­வர் விய­ன­ரசு இந்து அமைப்­பி­ன­ருக்கு எதிர்ப்புத் தெரி­வித்­ததால் இரு தரப்­பி­ன­ரி­டைய கூச்­சல் குழப்­பம் ஏற்­பட்­டது.

கைக­லப்பு ஏற்­படும் அள­வுக்கு அனை­வ­ரும் மேடை அரு­கில் நின்று கூச்­சல் போட்­ட­னர். இதை­ய­டுத்து இந்து அமைப்­பி­ன­ரின் கோரிக்­கையை ஏற்று மேடை­யில் வைக்­கப்­பட்­டுள்ள பதாகையில் கட­வுள் படம் மாட்­டப்­பட்­டது.

இதற்­கி­டை­யில் கூச்­சல் குழப்­பம் கார­ண­மாக கருத்துக் கேட்புக் கூட்­டத்­தைப் பாதி­யில் முடித்­துக் கொள்­வ­தா­க­வும், கூட்­டத்­தில் பங்­கேற்­ற­வர்­கள் தங்­கள் கருத்­து­களை அஞ்­சல் வழி இந்து அற­நி­லை­யத் துறை அலு­வ­ல­கத்­திற்கு அனுப்பி வைக்­கு­மா­றும் குன்­றக்­குடி பொன்­னம்­பல அடி­க­ளார் அறி­வித்­தார். அதையடுத்து அனை­வ­ரும் தங்­க­ளது கருத்­து­களை அதற்கு உரிய படி­வத்­தில் எழுதி அதனை குழு­வி­ன­ரி­டம் ஒப்­ப­டைத்­த­னர். குன்­றக்­குடி பொன்­னம்­பல அடி­க­ளார் செய்­தி­யா­ளர்­க­ளுக்கு அளித்த பேட்­டி­யில், உயர்­நீ­தி­மன்ற உத்­த­ர­வுப்­படி தமி­ழில் குட­மு­ழுக்கு நடத்­து­வது, அதற்­கான நெறி­மு­றை­களை வகுப்­பது குறித்து முதன்­மு­த­லாக நெல்லை, தூத்­துக்­குடி மண்­ட­லத்­தில் கருத்து கேட்­கப்­பட்­டுள்­ளது. கலந்துகொண்­ட­வர்­க­ளி­டம் எழுத்து வடி­வில் கருத்­து­கள் பெறப்­பட்­டுள்­ளது, தொடர்ந்து தமி­ழ­கம் முழு­வ­தும் மண்­ட­லம் வாரி­யாக கருத்துக் கேட்புக் கூட்­டம் நடத்­தப்­பட்டு இது­கு­றித்த அறிக்கை நீதி­மன்­றத்­தில் ஒப்­ப­டைக்­கப்­படும் என தெரி­வித்­தார்.