தமிழகத்தில் மிதக்கும் நான்கு கப்பல் தளங்களை அமைக்க மத்திய அரசு அனுமதி

1 mins read
8539ef41-fe8c-46c3-b2d3-3b78ef4b3998
-

புது­டெல்லி: இந்­தி­யா­வின் ஆன்­மீ­கத் தல­மான ராமேஸ்­வ­ரத்­தில் உள்ள அக்­னி­தீர்த்­தம், வில்­லூண்டி தீர்த்­தம் ஆகிய இடங்­களி­லும் கட­லூர், கன்­னி­யா­குமரி மாவட்­டங்­க­ளி­லும் சுற்­றுப் பய­ணி­களை ஈர்க்­கும் வகை­யில், நான்கு மிதக்­கும் கப்­பல் இறங்குத் தளங்­கள் அமைக்­கப்­பட உள்­ளன. இதற்கு மத்­திய கப்­பல் போக்கு­வ­ரத்­துத் துறை அனு­மதி அளித்­துள்­ளது.

இந்த மிதக்­கும் இறங்குத் தளங்­கள் சுற்­றுச்­சூ­ழ­லுக்கு உகந்­த­தா­க­வும் நவீ­னம­ய­மா­க­வும் நீண்ட காலம் உழைக்­கக் கூடியதாக­வும் இருக்கும்.

"இதன்மூலம் சுற்­றுப்­ப­ய­ணி­கள் தடை­யின்­றி­யும் பாது­காப்­பா­க­வும் போக்­கு­வ­ரத்தை மேற்­கொள்­ள­ முடியும்,'' எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இது­கு­றித்து கருத்து தெரி வித்­துள்ள மத்­திய துறைமுகங்­கள், கப்­பல் போக்­கு­வ­ரத்து மற்­றும் நீர்­வ­ழித்­துறை அமைச்­சர் சர்­பா­னந்த சோனோ­வால், "மிதக்­கும் கப்­பல் இறங்குத் தளங்­கள் இந்­தி­யா­வுக்கு மிக­வும் அவ­சி­ய­மானது. கர்நாட கத்தில் 11 இறங்குத் தளங்களை அமைக்க அமைச்சு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்­வழி உள்­ளூர் மக்­க­ளுக்கு அதிக வேலை­வாய்ப்­பு­கள் கிடைப்­ப­து­டன், அந்­தந்த பகு­தி­வாழ் மக்களின் வர்த்­த­க­மும் அதி­க­ரிக்­கும்," என்று குறிப்­பிட்­டுள்­ளார்.