சென்னை: சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட மூன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கக் கட்டிகள், நகைகளைச் சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டனர்.
சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் வந்த இரண்டு ஆடவர்களின் உடைமைகளைச் சுங்கத்துறை அதிகாரிகள் சோதித்தபோது, அவர்களது கைப்பையில் ரகசிய அறைகள் வைத்து அதில் தலா 100 கிராம் எடை கொண்ட 68 தங்கக் கட்டிகளை மறைத்து கடத்தி வந்ததைக் கண்டுபிடித்தனர். இதையடுத்து இருவரிடம் இருந்தும் ரூ.3 கோடியே 32 லட்சம் மதிப்புள்ள 6 கிலோ 800 கிராம் எடை கொண்ட 68 தங்கக் கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அதேபோல், மலேசியாவில் இருந்து சென்னை வந்த மலேசியப் பெண்ணின் உடைமைகளைச் சோதித்தபோது, 740 கிராம் எடை கொண்ட தங்க நகைகளை உள்ளாடைக்குள் மறைத்து கடத்தி வந்ததைக் கண்டுபிடித்தனர். மூவரும் கைதாகினர்.
சிங்கப்பூரில் இருந்து கடத்தி வந்த தலா 100 கிராம் எடை கொண்ட 68 தங்கக் கட்டிகளை சுங்க அதிகாரி கள் பறிமுதல் செய்தனர்.
படம்: ஊடகம்

