அமைச்சரவைக் கூட்டத்தில் இணைய தடைச் சட்ட மசோதா குறித்து ஆலோசனை 'மக்களுக்கு எதிராக ஆளுநர் ஆர்.என். ரவி செயல்படுகிறார்'

2 mins read
693d5301-cace-4d49-851d-18fbbe4a06ae
-

சென்னை: தமிழ்நாடு அரசு அனுப்பிய இணையச் சூதாட்ட தடை சட்ட மசோ­தாவை தமி­ழக ஆளு­நர் ஆர்.என். ரவி இரண்டாவது முறையாகத் திருப்பி அனுப்­பிய நிலை­யில், தமி­ழக மக்­க­ளுக்கு எதி­ராக அவர் செயல்­ப­டு­வ­தாக ஒரு சில தலை­வர்­கள் குற்­றம் சாட்­டி­யுள்­ள­னர்.

இணைய ரம்மி தடை சட்ட மசோதாவில் மேலும் சில திருத் தங்களைச் செய்யவேண்டிய தேவை உள்ளதால் மசோதா திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கம் கூறப்பட்டுள்ளது.

தமிழ்­நாட்­டில் இணைய ரம்மி உள்ளிட்ட சூதாட்டத்தால் பணத்தை இழந்­த­வர்­களில் இது­வரை 44 பேர் உயிரை மாய்த்­துக் கொண்­டுள்­ள­னர்.

இந்தச் சூதாட்­டத்­தால் ஏழை­களும் நடுத்­தர வர்க்கத்தைச் சேர்ந்த மக்களும் அதிகம் பாதிக்­கப்படு­வ­தால் இணைய ரம்மி விளையாட்டை தடை­செய்ய கடந்த ஆண்டு அக்­டோ­பர் மாதம் சட்­டப்­பே­ர­வை­யில் ஒருமன­தாக மசோதா நிறை­வேற்­றப்­பட்டு ஆளுநரின் ஒப்­பு­த­லுக்­காக அனுப்­பப்­பட்­டது.

ஆனால், அதற்கு ஒப்­பு­தல் தரா­மல் காலதாமதம் செய்து வந்த ஆளு­நர், கடந்த நவம்­பர் மாதம் சட்ட மசோதா தொடர்­பாக விளக்­கம் கேட்டு அர­சுக்கு கடி­தம் எழு­தி­னார்.

இந்­தக் கடி­தத்­துக்கு 24 மணி நேரத்­தில் அரசு விளக்­கம் அளித்­தது.

எனி­னும், நான்கு மாதங்­கள் 11 நாள்­க­ளாக மசோ­தா­மீது எந்­த­வித நட­வ­டிக்­கை­யும் எடுக்­கா­மல் ஆளு­நர் தாம­தப்­ப­டுத்­தி வந்தார்.

இந்நிலையில், முத­ல்வர் ஸ்டா­லி­னும் சட்­டத்­துறை அமைச்­சர் ரகு­ப­தி­யும் ஆளு­ந­ரைச் சந்­தித்து மசோ­தா­வுக்கு விரைந்து ஒப்­பு­தல் அளிக்கும்படி வலியுறுத்­தி­னர்.

இருப்பி­னும், அவர் எந்த முடி­வும் எடுக்­கா­மல் புதன்கிழமை மாலை திடீ­ரென மசோ­தாவை அர­சுக்கே திருப்பி அனுப்­பிய தாகவும் இணையச் சூதாட்­டத்தைத் தடை செய்ய சட்­ட­மியற்­றும் அதி­கா­ரம் சட்­டப்­பே­ர­வைக்கு இல்லை என ஆளு­நர் தெரி­வித்­துள்­ள­தா­கவும் கூறப்­ப­டு­கிறது.

இணையச் சூதாட்­டத்­தால் உயிர்­கள் பலி­யா­கிக் கொண்டி ருக்­கும் நிலை­யில், சூதாட்ட நிறு­வ­னங்­க­ளின் அதி­கா­ரி­களை அழைத்து உரை­யா­டும் ஆளு­நர், மக்­க­ளின் உயி­ரோடு விளை­யாடு வதாக இந்­திய கம்­யூ­னிஸ்டு கட்சியின் மாநி­லச் செய­லா­ளர் முத்த­ர­சன், பாமக தலை­வர் அன்பு­மணி ராம­தாஸ் ஆகி­யோர் குற்­றம்­சாட்டி உள்­ள­னர்.

சட்ட நிபுணர்களுடன் கலந்தா லோசித்து நீதிமன்றத்தை அரசு நாடவேண்டும் என முத்தரசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

அமைச்சரவையில் விவாதம்

இதனிடையே, நேற்று மாலை நடைபெறவிருந்த அமைச்சரவைக் கூட்டத்தில், இந்த இணையச் சூதாட்ட விவகாரம் குறித்து விவாதிக்கப்பட இருந்தது. அடுத்தகட்ட நடவடிக்கைகள், சட்டபூா்வ நடவடிக்கைகள் குறித் தும் கூட்டத்தில் ஆலோசிக்கப் படும் எனத் தகவல்கள் கூறின.