தென்காசி: தென்காசியில் உள்ள மங்களாபுரம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள், தங்களது விவசாய நிலங் களுக்குப் பாசன வசதி அளிக்கும் குளத்தையும் கால்வாயையும் காணவில்லை என அங்குள்ள சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுவரொட்டி ஒட்டியுள்ளனர்.
"எங்களது முக்கிய வாழ்வா தாரமாக இருந்து வரும் விவசாய நிலங்களுக்குப் பாசன வசதி அளிக்கும் குளம், கால்வாய்களைக் காணவில்லை," என்று சுவரொட்டியில் குறிப்பிட்டுள்ள அவர்கள், அவற்றை மீட்டுத் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே உள்ள மங்களாபுரம் கிராம மக்களின் முக்கியத் தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது. அப்பகுதியில் 600 ஏக்கருக்கும் மேலான விளைநிலங்களில் விவசாயம் நடந்து வருகிறது.
இந்நிலங்களுக்கு பன்னீர் பெரியகுளம் வழியாக பாசன வசதி கிடைத்து வரும் நிலையில், தற்போது இந்தக் குளத்தைக் காணவில்லை என விவசாயிகள் புகார் கூறியுள்ளனர்.
"பன்னீர் பெரியகுளமானது ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் பணிகளை மேற்கொள்ள முடியாமல் உள்ளனர். அத்துடன், குளத்தில் இருந்து விவசாய நிலத்திற்கு தண்ணீர் செல்லக்கூடிய கால்வாயும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
இதனால், வருங்காலங்களில் விவசாயப் பணிகளைத் தொடர முடியாத சூழல் நிலவுகிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத் திடம் பலமுறை புகார் அளித்தும் பலனில்லை. எனவே, தங்களது வாழ்வாதாரமான விவசாயப் பணிகளை மேற்கொள்ள ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள குளத்தை மீட்டுத்தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

