25,000 ஏக்கர் விளைநிலம் தர எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

25,000 ஏக்கர் விளைநிலம் தர எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

2 mins read
9044da51-a886-4bd2-af6f-e613d1329dde
கட­லூர் மாவட்­டம், நெய்­வே­லி­யில் செயல்­பட்டு வரும் என்­எல்சி நிறு­வ­னம், நிலக்­கரி சுரங்க விரி­வாக்­கப் பணிகளுக்­காக அம்­மா­வட்­டத்­தில் உள்ள பல்­வேறு பகு­தி­க­ளி­லும் 25,000 ஏக்கர் வேளாண் நிலங்களைக் கையகப் ­ப­டுத்த முயன்று வரு­கிறது. படம்: பிக்ஸாபே -

கட­லூர்: கட­லூர் மாவட்­டம், நெய்­வே­லி­யில் செயல்­பட்டு வரும் என்­எல்சி நிறு­வ­னம், நிலக்­கரி சுரங்க விரி­வாக்­கப் பணிகளுக்­காக அம்­மா­வட்­டத்­தில் உள்ள பல்­வேறு பகு­தி­க­ளி­லும் 25,000 ஏக்கர் வேளாண் நிலங்களைக் கையகப் ­ப­டுத்த முயன்று வரு­கிறது.

இதற்கு அர­சி­யல் கட்­சி­யி­ன­ரும் விவ­சா­யி­களும் கடும் எதிர்ப்பு தெரி­வித்து வரு­கின்­ற­னர்.

இந்­நி­லை­யில், நிலக்­கரி சுரங்க விரி­வாக்­கத்­துக்­காக வேளாண் விளை­நி­லங்­க­ளைக் கைய­கப்­ப­டுத்­தும் பணி­யைக் கைவிட வேண்­டும் என்­பதை வலி­யு­றுத்தி பாட்­டாளி மக்­கள் கட்­சித் தலை­வர் அன்­பு­மணி ராம­தாஸ் கட­லூ­ரில் நேற்று முழு அடைப்­புப் போராட்­டம் நடத்­து­வதற்கு அழைப்பு விடுத்திருந்­தார்.

இதை­ய­டுத்து, அங்கு எந்த ஒரு அசம்­பா­வி­த­மும் நிக­ழா­மல் பாது­காப்பு வழங்­கு­வ­தற்­காக 7,000 காவ­லர்­கள் குவிக்­கப்­பட்டி ருந்­த­னர்.

இந்­தப் போராட்­டத்தை முன்­னிட்டு முன்­னெச்­ச­ரிக்­கை­யாக பாம­க­வி­னர் 95 பேரைக் காவ­லர்­கள் கைது செய்­த­னர்.

பல்­வேறு இடங்­களிலும் கடை கள் அடைக்­கப்­பட்­டி­ருந்­தா­லும் சில இடங்­களில் கடை­கள் திறக்­கப்­பட்­டி­ருந்­தன.

காவ­லர்­க­ளின் பாது­காப்­பு­டன் 100 விழுக்­காடு அர­சுப் பேருந்­து­களும் 50 விழுக்­காடு தனி­யார் பேருந்­து­களும் இயக்­கப்­பட்­ட­தா­க­வும் அங்கு இயல்பு நிலை நிலவு ­வ­தா­க­வும் தக­வல்­கள் கூறின.

இத­னி­டையே, "மக்­க­ளுக்கு ஒரு பிரச்­சினை என்­றால் முதல் ஆளாக குரல் கொடுப்­பது தேமு­தி­க­தான். மக்­க­ளின் எதிர்ப்பை மீறி விளை­நி­லங்­க­ளைக் கையகப் ­ப­டுத்­து­வதை என்­எல்சி நிர்­வா­கம் உட­ன­டி­யா­கக் கைவிட வேண்­டும்.

"இவ்விவ­கா­ரத்­தில் அரசு வேடிக்கை பார்த்துக்கொண்­டி­ருக்­கா­மல் நிலம் கையகப்­ப­டுத்­தும் பணியை உட­ன­டி­யா­கத் தடுத்து நிறுத்தி மக்­க­ளின் வாழ்­வா­தாரத்தைப் பாதுகாக்க வேண்­டும்," என்று தேமு­திக தலை­வர் விஜ­ய­காந்த் கூறி­யுள்­ளார்.

என்­எல்சி இந்­தியா லிமி­டெட் நிறு­வ­னம், தற்­போது 40க்கும் மேற்­பட்ட கிரா­மங்­களில் 25,000 ஏக்கர் ­நி­லங்­க­ளைக் கையகப் ­ப­டுத்­தத் திட்­ட­மிட்­டுள்­ளது.

அண்­மை­யில் கரி வெட்டி, கத்­தாழை, வளைய மாதேவி, வடக்கு வெள்­ளூர், அம்­மேரி, மும்­மு­டி­ச்சோ­ழன் உள்­ளிட்ட 40க்கும் மேற்­பட்ட கிராம மக்­கள் ஒன்­றி­ணைந்து என்­எல்சி, மாவட்ட நிர்­வா­கம், வேளாண் துறை அமைச்­சர் உள்­ளிட்­டோரை கண்­டித்து 'மக்­களை ஏமாற்­றாதே' என்ற சுவ­ரொட்­டி­களைக் கிரா­மங்­கள் முழு­வ­தும் ஒட்டி தங்­க­ளது எதிர்ப்­பைத் தெரி­வித்­த­னர்.

இந்­தச் சுவ­ரொட்­டி­களில் ஏக்­க­ருக்கு 1 கோடி ரூபாய் வழங்கவேண்­டும், கல்வித் தகு­திக்­கேற்ப நிரந்­தர வேலை வழங்­க­வேண்­டும் என­வும் அவர்­கள் கோரிக்கை விடுத்­தி­ருந்­தது குறிப்­பி­டத்­தக்­கது.