சென்னை: இந்து சமய அறநிலை யத்துறை அமைச்சர் சேகர் பாபுக்கு 'பாட்ஷா' போல் இன்னொரு முகம் உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் பெருமிதம் தெரிவித் துள்ளார்.
சென்னையில் நடைபெற்று வரும் 'எங்கள் முதல்வர் எங்கள் பெருமை' என்ற வரலாற்றுப் புகைப்படக் கண்காட்சியை ரஜினிகாந்த் நேற்று நேரில் பார்வையிட்டார். அவருடன் அமைச்சர் சேகர் பாபுவும் நடிகர் யோகி பாபுவும் உடனிருந்தனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் இம்மாதம் 1ஆம் தேதியன்று தன் 70வது பிறந்தநாளைக் கொண் டாடிய நிலையில், அவர் கடந்து வந்த பாதை குறித்து கண்காட்சி யில் திமுகவினர் சித்திரித்திருந்தனர்.
அங்கு வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களோடு தானும் மு.க. ஸ்டாலினும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படமும் இருந்த தைக் கண்டு ரஜினிகாந்த் நெகிழ்ச்சி அடைந்தார்.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அமைச்சர் சேகர் பாபு ரொம்ப அன்பானவர், விசுவாசமானவர். அவருக்கு பாட்ஷா மாதிரி இன்னொரு முகம் உள்ளது. கண்காட்சிக்குச் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளார்.
"முதல்வர் ஸ்டாலின் தன் 54 ஆண்டுகால அரசியல் பயணத்தில், கட்சிக்காக உழைத்து படிப்படியாகப் பல பதவிகளை வகித்து இன்றைக்கு முதல்வராக இருக்கிறார் என்றால் அது மக்கள் அவரது உழைப்புக்கு கொடுத்த அங்கீகாரம்," எனப் புகழ்ந்தார்.
நடிகர் கமல்ஹாசன் பிப்ரவரி 28ல் திறந்துவைத்த கண்காட்சி இன்றுடன் நிறைவுபெறுகிறது.
புகைப்படக் கண்காட்சியை ரஜினிக்கு காண்பிக்கிறார் அமைச்சர் சேகர் பாபு (இடது). மு.க.ஸ்டா லினின் சிறு வயது படம், கருணாநிதி யுடன் இருந்த தருணங்கள் என பல அரிய புகைப்படங்கள் கண்காட்சியில் இருந்தன.
படம்: ஊடகம்

