தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கடும் விலை வீழ்ச்சி: வெங்காயப் பயிரை ஆடுகளுக்கு உணவாக்கிய விவசாயி பாலு

1 mins read
2fee04a4-d992-43d1-9d7f-7ea7842d4b2a
-

அமராவதி: தனது வெங்­கா­யத் துக்கு உரிய விலை கிடைக்­காத வேத­னை­யில், விவ­சாயி ஒரு­வர் தனது பயிர்­களை ஆடு­க­ளுக்கு உண­வாக்கி மேய­விட்­டுள்­ளார்.

ஆந்­திர மாநி­லம், கர்­னூல் மாவட்­டத்­தில் உள்ள கய்­ர­வடி கிரா­மத்­தைச் சேர்ந்த பாலு (படம்) என்ற விவ­சாயி, தனது ஐந்து ஏக்­கர் விளைநிலத்­தில் வெங்­கா­யத்தைப் பயி­ரிட்டு இருந்­தார்.

விளைச்­சல் அமோ­க­மாக இருந்­தா­லும், தற்­போது ஒரு கிலோ வெங்­கா­யம் ஐந்து ரூபாய்க்கு மட்­டுமே விற்­பனை யாவ­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இத­னால் மனவேதனை அடைந்த பாலு, வெங்காயத்தை அறு­வடை செய்து, பழுது நீக்கி, சுத்தம் செய்து சந்­தை­யில் ஐந்து ரூபாய்க்கு விற்­பனை செய்­வது கட்­டுப்­ப­டி­யா­காது என்­ப­தால் அவற்றை ஆடு­களை மேய விட்­டுவிட்டதா­கக் கூறி­யுள்­ளார்.

"மூன்று லட்ச ரூபாய் வரை செலவு செய்து வெங்­கா­யத்தை பயி­ரிட்டு என்ன பயன்? சந்­தைக்­குக் கொண்டுசென்று விற்பதால் மேலும் இழப்­பே ஏற்படும். இத னால் மன உளைச்சல்தான் மிஞ்சும். எனவேதான் இம்முடிவை எடுத்தேன்," என்று கூறி­யுள்­ளார்.