பெங்களூரு: லஞ்சம் கேட்ட அதிகாரிகளைத் தனது காளை மாட்டுடன் சென்று எல்லப்பா என்ற விவசாயி காணச் சென்ற தால் அதிகாரிகள் அதிர்ந்தனர். இச்சம்பவம் தொடர்பில் ஐந்து அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.
கர்நாடகா மாநிலம், சவனரு மாவட்டத்தைச் சேர்ந்தவர் விவசாயி எல்லப்பா ரனோஜி. இவர் தனது நிலத்திற்கான ஆவணங்களில் திருத்தம் செய்யக் கோரி நகராட்சி அலுவகத்தை நீண்ட நாளாக அணுகிவந்துள்ளார்.
ஆனால், நகராட்சி அதி காரிகளோ வேலை நடப்பதற்கு ரூ.25,000 லஞ்சம் வழங்க வேண்டும் எனக் கேட்டுள்ளனர்.
இதையடுத்து எல்லப்பாவும் படாத பாடுபட்டு பணத்தைத் திரட்டி ரூ.25,000 தந்துள்ளார்.
அதன்பின்னரும் வேலையை முடித்துத் தராமல் கூடுதலாக ரூ.25,000 தரக் கோரி வேலை யைச் செய்துகொடுக்காமல் இழுத்தடித்து உள்ளனர்.
இதனால் வெறுப்படைந்த எல்லப்பா, அதிகாரிகள் மிரளும் விதமாக தன் காளை மாட்டு டன் நகராட்சி அலுவலகத்திற் குள் நுழைந்தார்.
"என்னிடம் பணம் எதுவும் இல்லை, இந்த காளை மாட்டை வைத்துக்கொண்டு காரியத்தை முடித்துத் தாருங்கள்," என்றார்.
இந்தக் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.
அதிகாரி களை மிரள வைக்கும் விதத்தில் தன் காளை மாட்டுடன் நகராட்சி அலுவல கத்திற்குள் நுழைந்த விவசாயி.
படம்: ஊடகம்

