சளி, காய்ச்சல் பாதிப்பு: இளையர் பலி

சளி, காய்ச்சல் பாதிப்பு: இளையர் பலி

2 mins read
73fc312f-cd86-4dfc-924a-40de9a6b89b7
தமி­ழ­கத்­தில் சளி, காய்ச்­சல் பாதிப்­பால் (இன்­ஃபு­ளு ­யன்சா) இளை­யர் ஒரு­வர் உயி­ரி­ழந்­து­விட்­டார். எனவே பொது­மக்­கள் எச்­ச­ரிக்­கை­யாக இருக்க வேண்­டும் என தமி­ழக அரசு அறி­வு­றுத்தி உள்­ளது. படம்: த இந்து -

கவனம் தேவை என தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்து

சென்னை: தமி­ழ­கத்­தில் சளி, காய்ச்­சல் பாதிப்­பால் (இன்­ஃபு­ளு ­யன்சா) இளை­யர் ஒரு­வர் உயி­ரி­ழந்­து­விட்­டார். எனவே பொது­மக்­கள் எச்­ச­ரிக்­கை­யாக இருக்க வேண்­டும் என தமி­ழக அரசு அறி­வு­றுத்தி உள்­ளது.

இத­னி­டையே, தமிழ்­நாட்­டில் மீண்­டும் ஓமிக்­ரான் கொரோனா தொற்­றுப் பர­வல் அதி­க­ரித்து வரு­வ­தாக மக்­கள் நல்­வாழ்­வுத்­துறை அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன் தெரி­வித்­துள்­ளார்.

சென்­னை­யில் செய்­தி­யா­ளர்­களி­டம் பேசிய அவர், பொது மக்­கள் எங்கு சென்­றா­லும் முகக்­க­வ­சம் அணிய வேண்­டும் என அறி­வு­றுத்­தி்­னார்.

பெங்­க­ளூ­ரு­வில் பணி­யாற்றி வந்த திருச்­சியைச் சேர்ந்த 27 வயது இளையர் அண்­மை­யில் கோவா­வுக்கு சுற்­றுலா சென்று திரும்­பி­ய­தா­க­வும் கடந்த 9ஆம் தேதி ஊர் திரும்­பிய நிலை­யில் அவ­ருக்கு திடீர் மூச்­சுத்­தி­ண­றல், வாந்தி, மயக்­கம் ஏற்­பட்­ட­தா­க­வும் அமைச்­சர் கூறி­னார்.

இத்­த­கைய அறி­கு­றி­க­ளு­டன் தனி­யார் மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்ட அந்த இளை­யர் ஒரு­வார சிகிச்சை பல­ன­ளிக்­கா­மல் உயி­ரி­ழந்­து­விட்­டார்.

"இதை­ய­டுத்து அவ­ரு­டன் கோவா சென்று திரும்­பிய நால்­வரும் இளை­ய­ரின் குடும்­பத்­தாரும் தனி­மைப்­ப­டுத்­தப்பட்­டுள்­ள­னர்," என்­றார் அமைச்­சர்.

உயி­ரி­ழந்த இளை­ய­ருக்கு வேறு இணை­நோய்­கள் இருந்­தனவா என்­ப­தைக் கண்­ட­றி­வதற்­கான பரி­சோ­த­னை­கள் மேற்­கொள்­ளப்­பட்­ட­தா­க­வும் அவர் கூறி­னார். மேலும், கொரோனா தடுப்பு நெறி­மு­றை­களை மக்­கள் முழு­மை­யா­கக் கடைப்­பி­டிக்க வேண்­டும் என்­றும் கேட்­டுக்­கொண்­டார்.

இத­னி­டையே தமி­ழ­கத்­தில் புதிய வகை கொரோனா தொற்று பரவி வரு­வ­தா­கக் கூறப்­படும் நிலை­யில், பாதிப்­பைக் கண்­ட­றிய நோயா­ளி­க­ளின் சளி மாதி­ரி­கள் மர­பணு பகுப்­பாய்­வுக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­வ­தாக மாநில பொது­ சு­கா­தா­ரத்­துறை இயக்­கு­நர் செல்­வ­விநா­ய­கம் தெரி­வித்­துள்­ளார்.

தமிழகத்தில் பிப்ரவரி மாத நிலவரப்படி 545 பேருக்கு இன்ஃபுளுயன்சா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.

புதிய வகை கிருமித்தொற்று பரவுகிறதா என்பதைக் கண்டறிய, பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளைச் சேர்ந்த கொரோனா நோயாளிகளின் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மரபணு பகுப்பாய்வு நடைபெறுவதாக செல்வவிநாயகம் தெரிவித்தார்.