தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கூகல் செயலி மூலம் லஞ்சம் பெற்ற காவலர்கள் கைது

1 mins read
16d91210-a494-4943-ad9a-a60f42bb4b8d
கூகல் செயலி மூலம் லஞ்­சம் பெற்ற காஞ்­சி­பு­ரம் காவல்­து­றை­யி­னர் இரு­வர் கைதாகி உள்­ள­னர். படம்: ராய்ட்டர்ஸ் -

காஞ்­சி­பு­ரம்: கூகல் செயலி மூலம் லஞ்­சம் பெற்ற காஞ்­சி­பு­ரம் காவல்­து­றை­யி­னர் இரு­வர் கைதாகி உள்­ள­னர்.

அதிக நட­மாட்­டம் இல்­லாத பகு­தி­யில், காருக்­குள் அமர்ந்து பேசிக்­கொண்­டி­ருந்த இளம் காதல் ஜோடியை மிரட்டி அவர்கள் லஞ்­சம் பெற்­றது தெரி­ய­வந்­துள்­ளது.

அண்­மை­யில் படப்பை பகு­தி­யில் காவ­லர்­கள் மணி­பா­ரதி, அமிர்­த­ராஜ் ஆகிய இரு­வ­ரும் சுற்­றுக்­கா­வல் பணி­யில் ஈடு­பட்­டி­ருந்­த­னர். அப்­போது சாலை­யோ­ரம் காரில் அமர்ந்து பேசிக் கொண்­டி­ருந்த காதல் ஜோடி கண்­ணில்­பட, இரு­வ­ரை­யும் விசா­ரித்­துள்­ள­னர்.

தங்­க­ளுக்குத் திரு­ம­ணம் நிச்சய­மா­கி­விட்­டது என்று தெரி­வித்த பிற­கும் விடாத இரு காவ­லர்­களும் லஞ்­சம் தரக்­கேட்டு மிரட்­டி­ய­தா­கத் தெரி­கிறது.

இல்­லை­யெ­னில் இருவர் மீதும் வழக்­குப்­ப­திவு செய்­யப்­படும் என்று கூறி­ய­தால் காத­லர்­கள் பத­றிப்­போ­யி­னர்.

இரு­வ­ரும் தங்­க­ளி­டம் ரொக்கப்­ப­ணம் இல்லை என்று கூறவே, 'கூகல் பே' செய­லி மூலம் ரூ.4,000 அனுப்­பு­மாறு வற்பு­றுத்தி உள்­ள­னர்.

வேறு வழி­யின்றி பணத்தை அனுப்பிய பின்­னர், காவல்­துறை உய­ர­தி­கா­ரி­க­ளி­டம் காதல் ஜோடி புகார் அளிக்க, அதன் பேரில் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு, காவலர்­கள் இரு­வ­ரும் கைது செய்­யப்­பட்­ட­னர்.