வெயில் தாக்கம்: தமிழக மின் தேவை அதிகரிப்பு

2 mins read

சென்னை: கோடை காலம் தொடங்­கி­யதை அடுத்து தமி­ழ­கத்­தில் மின் பயன்­பாடு அதி­க­ரித்­துள்­ளது. இதன் எதி­ரொ­லி­யாக தமி­ழ­கத்­தின் மின்­தேவை இது­வரை இல்­லாத அள­வுக்கு 17,647 மெகா­வாட் ஆக புதிய உச்­சத்தை எட்­டி­யுள்­ளது.

எதிர்­வ­ரும் நாள்­களில் மின் தேவை மேலும் அதி­க­ரிக்க வாய்ப்­புள்­ள­தா­க­வும் குறிப்­பாக மே மாதம்் புதிய உச்­சத்தை எட்­டக்­கூ­டும் என்­றும் அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

தமி­ழ­கத்­தின் மொத்த மின்­நு­கர்­வோர் எண்­ணிக்கை ஏறத்­தாழ 2.67 கோடி­யா­கும். தற்­போது அன்­றாட மின் தேவை என்­பது சுமார் 15 ஆயி­ரம் மெகா­வாட் என்ற அள­வில் உள்­ளது. இதில், விவ­சா­யத்­துக்கு 2,500 மெகா­வாட் ஒதுக்­கப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில் கோடை காலம் தொடங்கி உள்­ள­தால் வெயி­லின் தாக்­கம் அதி­க­ரித்­துள்­ளது.

மாநி­லத்­தின் பல்­வேறு பகு­தி­க­ளி­லும் அதிக வெப்­ப­நிலை பதி­வாகி வரு­கிறது. இதன் கார­ண­மாக வீடு­களில் மின்­வி­சிறி, குளிர்­சா­த­னங்­க­ளின் பயன்­பாடு அதி­க­ரிக்­கத் தொடங்கி உள்­ளது. இதை­ய­டுத்து மாநி­லத்­தின் அன்­றாட மின் தேவை 16 ஆயி­ரம் மெகா­வாட் என்ற அள­வைக் கடந்­து­விட்­டது.

விவ­சா­யத்­துக்­காக தமி­ழக அரசு கூடு­த­லாக 1.50 லட்­சம் புதிய மின் இணைப்­பு­களை வழங்­கி­யுள்­ள­தால் கூடு­த­லாக 727 மெகா­வாட் தேவைப்­ப­டு­வ­தாக அதி­கா­ரி­கள் கூறு­கின்­ற­னர்.

இத­னால், முன் எப்­போ­தும் இல்­லாத அள­வாக கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை அன்­றாட மின் தேவை 17,647 மெகா­வாட்­டாக அதி­க­ரித்­து­விட்­டது. கடந்த 2022 ஏப்­ரல் 29ஆம் தேதி தமி­ழக மின் பயன்­பாடு 17,563 மெகா­வாட் என்ற அளவை எட்­டி­யி­ருந்­தது.

எனவே அடுத்து வரும் நாள்­களில் அன்­றாட மின்­தேவை 18 ஆயி­ரம் முதல் 19 ஆயி­ரம் மெகா­வாட் என்ற அள­வுக்கு அதி­க­ரிக்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தாக மின்­வா­ரிய அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.