சென்னை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 16 பேரை விரைவாக விடுவிக்க மத்திய வெளியுறவுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி உ ள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், அடிக்கடி நிகழும் கைது நடவடிக்கை உள்ளிட்ட சம்பவங்கள் தமிழகத்தின் ஏழை மீனவர்களின் வாழ்வாதாரத்தை சிதைத்து அவர்களின் மனதில் அச்ச உணர்வை உருவாக்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
"தற்போதைய நிலவரப்படி, தமிழ்நாட்டு மீனவர்களின் 102 மீன்பிடிப் படகுகள் இலங்கை வசம் உள்ளன. இலங்கையால் விடுவிக்கப்பட்ட 6 மீன்பிடிப் படகுகள் இன்னும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படவில்லை.
"இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 16 மீனவர்களையும், 102 மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவித்திட தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்," என பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

