கே.எஸ்.அழகிரி: இந்தியா வீழ்ந்துகொண்டிருக்கிறது

கே.எஸ்.அழகிரி: இந்தியா வீழ்ந்துகொண்டிருக்கிறது

2 mins read

சென்னை: பிர­த­மர் மோடி உண்­மைக்­குப் புறம்­பான தக­வல்­களை வெளி­யிட்டு வரு­வ­தாக தமி­ழக காங்­கி­ரஸ் தலை­வர் கே.எஸ்.அழகிரி குற்­றம்­சாட்டி உள்­ளார்.

பிர­த­மர் மோடி ஆட்­சி­யில் இந்­தியா வீழ்ந்து கொண்­டி­ருப்­ப­தாக அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

தொழி­ல­தி­பர் அதா­னி­யின் பங்­குச் சந்தை ஊழ­லுக்கு மத்­திய பாஜக அர­சும் பிர­த­மர் மோடி­யும் துணை போவ­தாக காங்­கி­ரஸ் குற்­றம்­சாட்டி உள்­ளது. இதைக் கண்­டித்து தமிழ்­நாடு காங்­கி­ரஸ் சார்­பில் ஆளு­நர் மாளிகை அருகே கண்­டன ஆர்ப்­பாட்­டம் நடை­பெ­றும் என அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

அதன்­படி நேற்று முன்­தி­னம் நடந்த ஆர்ப்­பாட்­டத்­தில் கலந்­து­கொண்டு பேசிய கே.எஸ்.அழ­கிரி, மன்­மோ­கன் சிங் பிர­த­ம­ராக இருந்­த­போது இருந்த மொத்த உள்­நாட்டு உற்­பத்­தியை விட, தற்­போது இரண்டு விழுக்­காடு குறைந்­துள்­ள­தா­கச் சுட்­டிக்­காட்­டி­னார்.

"கர்­நா­டக மாநி­லத்­தில் நடந்த நிகழ்ச்­சி­யில் பேசிய பிர­த­மர் மோடி, தாம் இந்­தி­யாவை வளர்ச்­சிப் பாதைக்கு அழைத்­துச் செல்­வ­தா­க­வும் காங்­கி­ரஸ் கட்சி தமக்கு கல்­லறை தோண்­டு­கிறது என்­றும் கூறி­யுள்­ள­ளார்.

"இந்­தி­யா­வின் வர­லாற்­றுச் சிறப்பு மிக்க ஜன­நா­ய­கம் குறித்து ராகுல் காந்தி வெளி­நாட்­டில் தரக்­கு­றை­வா­கப் பேசி­வ­ரு­வ­தா­க­வும் பிர­த­மர் கூறு­கி­றார். இவ்­விரு குற்­றச்­சாட்­டு­க­ளுமே உண்­மைக்­குப் புறம்­பா­னவை.

"இந்­தி­யா­வில் எந்த வளர்ச்­சியை பாஜக கொண்டு வந்­தி­ருக்­கிறது? அதா­னி­தான் வளர்ந்­து­கொண்டே இருக்­கி­றார். இந்­தியா வீழ்ந்து கொண்­டி­ருக்­கிறது," என்­றார் கே.எஸ். அழ­கிரி.

விவ­சா­யி­க­ளுக்கு இரட்­டிப்பு வரு­வாய் பெற்­றுத் தரு­வ­தாக பிர­த­மர் கூறி­யது நிறை­வே­ற­வில்லை என்­றும் விளை பொருள்­க­ளுக்கு விலை கிடைக்­கா­மல் விவ­சா­யி­கள் பரி­த­வித்து வரு­வ­தா­க­வும் அழ­கிரி சாடி­னார்.

பிர­த­மர் இவ்வாறு தவ­றா­ன தக­வல்­க­ளைக் கூறு­வது சட்­டப்­படி குற்­றம் என்றும் பிர­த­மர் பொய்ப் பிர­சா­ரத்­தில் ஈடு­பட்­டுள்­ள­தா­கவும் கே.எஸ்.அழகிரி மேலும் குற்றம் சாட்டினார்.